"இது துரோகம்".. அதிக அன்பு வைத்தால் இப்படித்தான்.. கண்டுகொள்ளாத தோனி.. கொதிக்கும் ரெய்னா பேன்ஸ்!
சென்னை: சமூக வலைதளங்களில் தற்போது ரெய்னா ரசிகர்கள் பலர் சிஎஸ்கேவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதில் சிலர் தோனியையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
2022 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ளது. சிஎஸ்கே அணி முடிந்த அளவு பழைய அணியை உருவாக்க முயன்று பல வீரர்களை எடுத்துள்ளது. பிராவோ, உத்தப்பா, சாகர், மிட்சல் சாண்ட்னர், ராயுடு, கேஎம் ஆசிப் போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்குள் வந்துள்ளனர்.
தோனி, ஜடேஜா, ருத்துராஜ் ஏற்கனவே அணியால் ரீ டெயின் செய்யப்பட்டுவிட்டனர். இது போக டு பிளசிஸ், ஷரத்துல் தாக்கூர் போன்ற வீரர்களை சிஎஸ்கே அணி மீண்டும் எடுக்க முடியாமல் போய்விட்டது.

சிஎஸ்கே ஐபிஎல்
நேற்று சிஎஸ்கே அணியில் ஷிவம் துபே ஏலம் எடுக்கப்பட்டார். அதேபோல் பல இளம் வீரர்களும் ஏலம் எடுக்கப்பட்டனர். ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஆடம் மில்னே, சிம்ரன்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஸ்சான் போன்ற புதிய படை சிஎஸ்கேவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் தேவன் கான்வாய் சிஎஸ்கே அணியால் எடுக்கப்பட்டுள்ளார். இவர் சிஎஸ்கேவிற்கு ஒன் டவுன் இறங்கும் வாய்ப்புகள் உள்ளன.

புதிய சிஎஸ்கே டீம்
ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெய்னா சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்படவில்லை. இவரை கடைசி வரை சிஎஸ்கே எடுக்க முயற்சி செய்யவே இல்லை. அதிலும் கடைசி கட்டத்தில் மறு ஏலத்தில் கூட சிஎஸ்கே இவரை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு கூட எடுக்க முயற்சி செய்யவில்லை. சிஎஸ்கேவின் இந்த முடிவு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரெய்னா
இந்த நிலையில் ரெய்னாவின் ரசிகர்கள் பல இணையத்தில் சிஎஸ்கேவை விமர்சனம் செய்து வருகின்றனர். சிஎஸ்கே அணிக்காக பல வருடங்களாக தொடர்ந்து ஆடியவர் ரெய்னா. சிஎஸ்கே அணியை அவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது அவரை திடீரென புறக்கணித்தது ஏன் என்று பலர் கேட்டு உள்ளனர். அதோடு ரெய்னாவின் முந்தைய ரெக்கார்டுகளை இவர்கள் போட்டு விமர்சனம் செய்துள்ளனர்.

தோனி
ரெய்னா சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணமாக இருந்த போட்டிகளை குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளனர். சிஎஸ்கே அணி ரெய்னாவிற்கு துரோகம் செய்துவிட்டது. அவரை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு வருகின்றனர். சில ரெய்னா ரசிகர்கள் தோனியையும் விமர்சனம் செய்துள்ளனர். அதில், தோனியை ரெய்னா மிகவும் நம்பினார். ஆனால் ரெய்னா ஏமாற்றப்பட்டுள்ளார்.

புறக்கணிப்பு
தோனியாவது ரெய்னாவை அணியில் எடுக்க குரல் கொடுத்து இருக்க வேண்டும். அவர் சொல்லி இருந்தால் ரெய்னாவை எடுத்து இருப்பார்கள். தோனிக்காக ரெய்னா எதையும் செய்வார். ஆனால் ரெய்னாவிற்காக தோனி இதை கூட செய்யவில்லை. தோனி சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற போது ரெய்னாவும் ஓய்வு பெற்றார். அந்த அளவிற்கு ரெய்னா அன்பு வைத்து இருந்தார என்று ரெய்னா ரசிகர்கள் பலர் விமர்சனம் செய்துள்ளனர். அதிகம் அன்பு வைத்தால் இப்படித்தான்.. என்று ரெய்னா ரசிகர்கள் விமர்சனம் வைத்து வருகின்றனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications