கண் கலங்கிய முதல்வர்.., காவி வேட்டியில் ஓபிஎஸ்! ஜெ. நினைவிடத்தில் சோகமயம்
Recommended Video

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.
உடல்நலக்குறைவு காரணமாக, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5ஆம் தேதி இரவு காலமானார் ஜெயலலிதா.
எனவே, ஜெயலலிதாவின் 2வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

அமைதி ஊர்வலம்
ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. வாலாஜா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடம் வரை அதிமுக சார்பில் இன்று அமைதி ஊர்வலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நிர்வாகிகள்
காலை 10.30 மணி அளவில் துவங்கிய அமைதி ஊர்வலத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கருப்புச் சட்டை
துக்கத்தை வெளிக்காட்டும் விதமாக இவர்கள் அனைவருமே கருப்புச்சட்டை அணிந்து இருந்தனர். அதிலும் பன்னீர்செல்வம் கருப்புச் சட்டையுடன், காவி வேட்டி அணிந்து இருந்தார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவருமே கருப்பு சட்டை மற்றும் வெள்ளை வேட்டி அணிந்து இருந்தனர்.

முதல்வர் கண்ணீர்
ஊர்வலம், ஜெயலலிதாவின் நினைவிடத்தை அடைந்ததும், முதலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மூன்று முறை நினைவிடத்தின் கால்பகுதியில் குனிந்து நின்று வணங்கி எழுந்தார். அப்போது அவரது கண்கள் கண்ணீர் மல்க காட்சியளித்தன.

உறுதிமொழி
இதன்பிறகு பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் கால் பகுதியில் குனிந்து மூன்று முறை வணக்கம் செலுத்தினார். அவரது தலை முழுக்க உதிரிப்பூக்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவரது கண்களும் கலங்கிய நிலையில் இருந்தன. இதனால் அந்த இடமே சோகமயமாக காட்சி அளித்தது. நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் பன்னீர்செல்வம் உறுதி மொழியை வாசிக்க, அதை மற்றவர்கள் வழிமொழிந்து கூறினர். பிறகு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
காத்து எங்க பக்கம் வீசுது.. கையை உயர்த்திய சண்முகம்! கைகோர்த்த வேலுமணி! எடப்பாடிக்குத் தான் சிக்கலே! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
எடப்பாடி செய்த அந்த 3 தவறுகள்.. "முக்குலத்தோர் கோபம்.." உடைந்து சிதற போகுது கட்சி? அடுத்து என்ன -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்! -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்!












Click it and Unblock the Notifications