445 இரண்டாவது அப்பீல் வழக்குகளை 58 நாளில் விசாரித்து முடிக்க இலக்கு: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 445, இரண்டாவது மேல்முறையீட்டு வழக்குகளை 58 நாட்களில் விசாரித்து முடிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகவும் தமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பார் கவுன்சில் உறுப்பினர்களுக்கு ஜி.ஆர்.சுவாமிநாதம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அக்கடிதத்தில் 2010-ம் ஆண்டு முதல் மொத்தம் 445 இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகளை பிப்ரவரி 7-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரையிலான 58 நாட்களில் விசாரித்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தந்தால் 58 நாட்களில் 445 வழக்குகளையும் முடித்துவிட முடியும் என கூறியுள்ளார்.
மேலும் இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 14-ந் தேதி தொடங்க உள்ளது. ஆகையால் அனைத்து வழக்கறிஞர்களும் தங்களது மனுதாரர்களை தொடர்பு கொண்டு அவர்கள் உயிருடன் உள்ளனரா? இல்லை எனில் அவர்களது சட்டப்பூர்வ பிரதிநிதிகள் இருக்கின்றனரா? என்பதை கண்டறிய வேண்டும். இவ்வழக்குகள் அனைத்தும் சீனியாரிட்டி அடிப்படையில் அதாவது வழக்கு பதிவு செய்யப்பட்ட தேதியின் அடிப்படையில் மட்டுமே விசாரிக்கப்படும் எனவும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
இவ்வழக்குகள் விசாரணையின் போது விசாரணை ஒத்திவைக்கப்பட மாட்டாது. இவ்வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட 7-வது நாளில் அதன் நகல்கள் வழக்கறிஞர்களுக்கு கிடைக்கும் எனவும் அக்கடிதத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
-
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப்












Click it and Unblock the Notifications