வாக்கு எண்ணிக்கை மையங்களில் மர்ம நபர்கள்... சந்தேகம் கிளப்பும் கமல்ஹாசன்..!
சென்னை: தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் மர்ம நபர்கள் நடமாடுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்தேகம் கிளப்பியுள்ளார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சரியில்லை என்பதே தனது புகார் என்றும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;
''தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெற்று முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் மீது நம்பகத்தன்மை இல்லை.
ஸ்ட்ராங் ரூமை சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு தன்னிச்சையாகவே செயலிழப்பது, இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் கண்டெய்னர் லாரிகள் வருவது, லேப்டாப்களுடன் மர்ம நபர்கள் வருவது என சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.''
''வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பதற்கான விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை. வாக்காளர்கள், வேட்பாளர்கள் , அரசியல் கட்சி பிரதிநிதிகள் போன்றோருக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. தற்போது வாக்காளர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் தேர்தல் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் இருக்கின்றனர்.''
''இந்த நிலை நான் போட்டியிட்ட தொகுதியில் வைக்கப்பட்டுள்ள இடம் மட்டும் அல்லாமல் தமிழகத்தில் உள்ள 75 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் இதேபோன்ற நிலைதான் காணப்படுகிறது. கண்டவர்களும் வாக்குப்பெட்டிகளை டூவிலர்களில் எடுத்துச்செல்லும் அவல நிலை இங்கு உள்ளது.''
''விஜய், அஜித், போன்றோர் எதில் வாக்களிக்க வந்தார்கள், எப்படி வாக்களிக்க வந்தார்கள் என்பதைக் காட்டிலும் அவர்கள் வாக்களிக்க வந்ததே எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.'' இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனுக்குள் கொடுத்த பிறகு அவர் இதனைக் கூறினார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications