சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாட்டிவதைக்க போகும் வெயில்! 3 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகுமாம்! கவனமா இருங்க மக்களே!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Recommended Video

    அடுத்த ஐந்து நாட்களுக்கு... இந்த பகுதிகளில் எல்லாம் மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்!

    தமிழகத்தில் கோடை காலம் உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது இருக்கும் நிலையில் பகல் நேரங்களில் மிகக் கடுமையாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தீபராஜன்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்... ரூ.5 லட்சம் நிவாரணம் தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தீபராஜன்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்... ரூ.5 லட்சம் நிவாரணம்

    இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    மழைக்கு வாய்ப்பு

    மழைக்கு வாய்ப்பு

    இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை

    அதிகபட்ச வெப்பநிலை

    நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் (ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி), சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 02, 03, 04 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அதிகமாக இருக்கக்கூடும்.

    மழை அளவு

    மழை அளவு

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தக்கலை (கன்னியாகுமரி) 4, பூதபாண்டி (கன்னியாகுமரி) 3, இரணியல் (கன்னியாகுமரி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), காங்கேயம் (திருப்பூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) தலா 2, சித்தார் (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி) பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), உதகமண்டலம் (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), தேவாலா (நீலகிரி), குந்தா பாலம் (நீலகிரி), திருச்செங்கோடு (நாமக்கல்) தலா 1 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    30.04.2022: லட்சத்தீவு கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 04.05.2022: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.

    English summary
    The maximum temperature in Tamil Nadu is likely to be 2-3 degrees Celsius in one or two places for the next three days, according to the Meteorological Department.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X