மெட்ரோ ரயில் பணி.. சென்னை அடையாறு ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை.. வேகமெடுக்கும் பணிகள்
சென்னை: சென்னையில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில், அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரயில் பாதை அமைப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணி வருகிற 15-ம் தேதி தொடங்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணி நிமித்தமாகவும் பல்வேறு தேவைகளுக்காகவும் சென்னை நகருக்கு வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

மெட்ரோ ரயில்
குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் சென்னையின் போக்குவரத்து நெரிசல் பற்றி தனி புத்தகமே எழுதலாம் என்ற அளவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி எந்த இடத்திற்கும் செல்ல முடியாத நிலைதான் சென்னையில் காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.

3 வழித்தடங்களில்
தற்போது 55 கி.மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 118.9 கி.மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

மாதவரம் -சிறுசேரி சிப்காட் இடையே
இந்த 3 வழித்தடங்களிலும் மொத்தம் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் 48 ரயில் நிலையங்களும் மாதவரம் -சிறுசேரி சிப்காட் இடையே 50 ரயில் நிலையங்களும் அமைகின்றன. அதேபோல், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் 30 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ஆற்றின் கீழே பாலம்
அதன் ஒருபகுதியாக வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு டெப்போ நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. அடையாறு ஆற்றின் கீழே அமைய இருக்கும் இந்த சுரங்கப்பாதை மக்களை வியக்க வைக்கும் படியாக அமைந்துள்ளது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே கூவத்தின் கீழ் சுரங்க ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை
இதே போல அடையாறில் உள்ள ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான மண் பரிசோதனை கடந்த மாதமே நடைபெற்றது. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications