மெட்ரோ ரயில் பணி.. சென்னை அடையாறு ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை.. வேகமெடுக்கும் பணிகள்
சென்னை: சென்னையில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில், அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரயில் பாதை அமைப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணி வருகிற 15-ம் தேதி தொடங்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணி நிமித்தமாகவும் பல்வேறு தேவைகளுக்காகவும் சென்னை நகருக்கு வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

மெட்ரோ ரயில்
குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் சென்னையின் போக்குவரத்து நெரிசல் பற்றி தனி புத்தகமே எழுதலாம் என்ற அளவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி எந்த இடத்திற்கும் செல்ல முடியாத நிலைதான் சென்னையில் காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.

3 வழித்தடங்களில்
தற்போது 55 கி.மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 118.9 கி.மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

மாதவரம் -சிறுசேரி சிப்காட் இடையே
இந்த 3 வழித்தடங்களிலும் மொத்தம் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் 48 ரயில் நிலையங்களும் மாதவரம் -சிறுசேரி சிப்காட் இடையே 50 ரயில் நிலையங்களும் அமைகின்றன. அதேபோல், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் 30 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ஆற்றின் கீழே பாலம்
அதன் ஒருபகுதியாக வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு டெப்போ நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. அடையாறு ஆற்றின் கீழே அமைய இருக்கும் இந்த சுரங்கப்பாதை மக்களை வியக்க வைக்கும் படியாக அமைந்துள்ளது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே கூவத்தின் கீழ் சுரங்க ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை
இதே போல அடையாறில் உள்ள ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான மண் பரிசோதனை கடந்த மாதமே நடைபெற்றது. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications