Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெட்ரோ ரயில் பணி.. சென்னை அடையாறு ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை.. வேகமெடுக்கும் பணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில், அடையாறு ஆற்றின் கீழ் சுரங்க ரயில் பாதை அமைப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணி வருகிற 15-ம் தேதி தொடங்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பணி நிமித்தமாகவும் பல்வேறு தேவைகளுக்காகவும் சென்னை நகருக்கு வெளி மாவட்டங்களில் இருந்து மக்கள் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

 மெட்ரோ ரயில்

மெட்ரோ ரயில்

குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் சென்னையின் போக்குவரத்து நெரிசல் பற்றி தனி புத்தகமே எழுதலாம் என்ற அளவுக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. திட்டமிட்டபடி எந்த இடத்திற்கும் செல்ல முடியாத நிலைதான் சென்னையில் காணப்படுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகின்றன.

3 வழித்தடங்களில்

3 வழித்தடங்களில்

தற்போது 55 கி.மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுப்போக்குவரத்தை ஊக்குவித்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 118.9 கி.மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

மாதவரம் -சிறுசேரி சிப்காட் இடையே

மாதவரம் -சிறுசேரி சிப்காட் இடையே

இந்த 3 வழித்தடங்களிலும் மொத்தம் 128 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் 48 ரயில் நிலையங்களும் மாதவரம் -சிறுசேரி சிப்காட் இடையே 50 ரயில் நிலையங்களும் அமைகின்றன. அதேபோல், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வழித்தடத்தில் 30 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 ஆற்றின் கீழே பாலம்

ஆற்றின் கீழே பாலம்

அதன் ஒருபகுதியாக வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையாறு ஆற்றை கடந்து அடையாறு டெப்போ நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. அடையாறு ஆற்றின் கீழே அமைய இருக்கும் இந்த சுரங்கப்பாதை மக்களை வியக்க வைக்கும் படியாக அமைந்துள்ளது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே கூவத்தின் கீழ் சுரங்க ரெயில் நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை

ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை

இதே போல அடையாறில் உள்ள ஆற்றின் கீழே சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான மண் பரிசோதனை கடந்த மாதமே நடைபெற்றது. இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+