கிரைண்டர் மீதான ஜிஎஸ்டி வரி 18%-ஆக உயர்வு.. குறைக்க நடவடிக்கை.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உறுதி
சென்னை: கிரைண்டர், மோட்டார் பம்பு செட்களின் ஜிஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்துள்ளார்.
Recommended Video
சண்டிகரில் நடைபெற்ற 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் உயர்த்தப்பட்ட வரி விகிதங்களை குறைப்பது தொடர்பாக மதுரையில் நடைபெறவுள்ள அடுத்தக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அவர் தெரிவித்திருக்கிறார்.
கிரைண்டர், மோட்டார் பம்பு செட்களை பொறுத்தவரை நடுத்தர வர்க்கத்தினரும், விவசாயிகளும் அதிகம் பயன்படுத்தக்கூடிய வாங்கக்கூடிய பொருட்களாக உள்ளன.

ஜிஎஸ்டி வரி உயர்வு
சண்டிகரில் நடைபெற்ற 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கிரைண்டர், மோட்டார் பம்பு செட், எல்.இ.டி.பல்புகள், கத்தி, பேனா, மை, உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டது. அதன்படி கிரைண்டரின் ஜி.எஸ்.டி. வரியானது 5%-ல் இருந்து 18%-ஆக உயர்ந்தது. இதேபோல் மோட்டார் பம்பு செட்களின் ஜி.எஸ்.டி. வரியும் 18% ஆக உயர்த்தப்பட்டது. இதேபோல் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பேனா, மை, உள்ளிட்ட பொருட்களின் ஜி.எஸ்.டி. வரியும் 12%-ல் இருந்து 18% ஆக அதிகரிக்கப்பட்டது.

அமைச்சர் உறுதி
இது நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் சண்டிகர் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நம்பிக்கையும் உறுதியும் அளித்துள்ளார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி சேவை மையம்
மேலும், ஜி.எஸ்.டி. சேவை மையங்களில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் ஆலோசனைகளும், வழிகாட்டுதலும் கிடைப்பதற்கு மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்படும் எனவும் தெரிவித்தார். முன்னதாக பம்புசெட் ஜி.எஸ்.டி.வரி விகிதம் உயர்வால் தொழில் முடக்கம் ஏற்படக்கூடும் என கோவையை சேர்ந்த பம்புசெட் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து தங்கள் கவலையை தெரிவித்தனர்.

சமாதான் திட்டம்
இதனிடையே தமிழகத்தில் நிலுவையில் உள்ள வாட் வரித் தொகையை வசூலிக்க உதவிடும் வகையில் சமாதான் திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications