பேயாட்சியில் பிணந் தின்னும் சாத்திரங்கள்.. ஸ்டாலின் ஆவேசம்; தர்மம் புதையுண்டதாக தமிழிசை கோபம்
சென்னை: அரூரில் 17 வயது மாணவி இரு இளைஞர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலினும், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி அருகே சிட்லிங் கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி. இவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றார்.

அப்போது மலம் கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற இந்த சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பலியாகிவிட்டார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அரூர்அருகே மாணவி கழிப்பிடம் சென்றபோது பாலியல் துன்புறுத்தலுக்குப்பின் சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்தநிகழ்ச்சி கண்டனத்துக்குரியது தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது.குற்றவாளிகளை கைது செய்துதண்டிக்கவேண்டும்வீடுதோறும் கழிப்பறை திட்டம் அனைவரையும் சென்றடையவேண்டும்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 11, 2018
இதுகுறித்து ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் தர்மபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை!
இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்! பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? என்று தனது டுவிட்டரில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தர்மபுரியில் 17வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தியறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும்வேதனை!
— M.K.Stalin (@mkstalin) November 11, 2018
இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்!
பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? pic.twitter.com/WrUDHXI9Ib
அதுபோல் பலாத்கார சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் அரூர் அருகே மாணவி கழிப்பிடம் சென்றபோது பாலியல் துன்புறுத்தலுக்குப் பின் சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்த நிகழ்ச்சி கண்டனத்துக்குரியது.
தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும். வீடுதோறும் கழிப்பறை திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று தமிழிசை தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications