தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை 21% அதிகம் பெய்துள்ளது... சென்னையில் 32% குறைவு
வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகத்தில் 21 சதவிகிதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 21 % அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் 32% குறைவாக வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளதாகவும் புவியரசன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தினசரியும் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, குமரி. நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னயில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியலரசன், தென்காசி,நெல்லை,ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார்.
மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர் டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும். அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் புவியரசன் கூறினார்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதியில் மழைபெய்யக்கூடும் என்றும் கூறினார். நாகப்பட்டினம் திருவாரூர் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிமி வேகத்தில் வீசக்கூடும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் மன்னார்வளைகுடா பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய புவியரசன், வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தமிழகத்தில் 21 % அதிகமாக மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இந்த காலகட்டத்தில் 17செ.மீ பதிவாக வேண்டும், ஆனால் தற்போது 20 செ.மீ பதிவாகி உள்ளது. அதே போல் சென்னையில் 32% குறைவாக வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளது. 25 செ.மீ பெய்ய வேண்டிய இடத்தில், இதுவரை 17செ.மீ மட்டுமே மழை பதிவாகியுள்ளதாக கூறினார்.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பான அளவே இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் கூறியிருந்தார். அக்டோபரில் தொடங்கியுள்ள மழை டிசம்பர் வரை பெய்யும் கடந்த ஆண்டைப்போல நடப்பாண்டும் வடகிழக்குப் பருவமழை அதிகம் பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னையில்தான் வழக்கமாக அதிக அளவில் மழை பெய்யும். கடந்த 2015ஆம் ஆண்டு நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித்தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெருவெள்ளம் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் , புதுக்கோட்டை, கடலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications