Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை 21% அதிகம் பெய்துள்ளது... சென்னையில் 32% குறைவு

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகத்தில் 21 சதவிகிதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 21 % அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் 32% குறைவாக வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளதாகவும் புவியரசன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 25ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தினசரியும் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, குமரி. நெல்லை, தூத்துக்குடியில் கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

Northeast monsoon rains in Tamil Nadu are 21% higher ... 32% less in Chennai

சென்னயில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியலரசன், தென்காசி,நெல்லை,ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார்.

மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர் டெல்டா மாவட்டங்களில் மழை நீடிக்கும். அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் புவியரசன் கூறினார்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதியில் மழைபெய்யக்கூடும் என்றும் கூறினார். நாகப்பட்டினம் திருவாரூர் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிமி வேகத்தில் வீசக்கூடும் என்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் மன்னார்வளைகுடா பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து பேசிய புவியரசன், வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தமிழகத்தில் 21 % அதிகமாக மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இந்த காலகட்டத்தில் 17செ.மீ பதிவாக வேண்டும், ஆனால் தற்போது 20 செ.மீ பதிவாகி உள்ளது. அதே போல் சென்னையில் 32% குறைவாக வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளது. 25 செ.மீ பெய்ய வேண்டிய இடத்தில், இதுவரை 17செ.மீ மட்டுமே மழை பதிவாகியுள்ளதாக கூறினார்.

தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பான அளவே இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் கூறியிருந்தார். அக்டோபரில் தொடங்கியுள்ள மழை டிசம்பர் வரை பெய்யும் கடந்த ஆண்டைப்போல நடப்பாண்டும் வடகிழக்குப் பருவமழை அதிகம் பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னையில்தான் வழக்கமாக அதிக அளவில் மழை பெய்யும். கடந்த 2015ஆம் ஆண்டு நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித்தீர்த்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெருவெள்ளம் சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் , புதுக்கோட்டை, கடலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன் தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்றும் நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+