சாய்னா நேவால் குறித்து ஆபாச பதிவு.. சென்னை போலீசில் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்.. முழு விவரம்
சென்னை: பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாசமாக கருத்து பதிவிட்டது தொடர்பாக நடிகர் சித்தார்த் போலீசில் மன்னிப்பு கேட்டுள்ளார். விசாரணையின்போது அவர் மன்னிப்பு கேட்டதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக ஆக்டிவில் இருந்து வருகிறார். அரசியல் ரீதியான கருத்துகளையும் அவ்வப்போது துணிச்சலாக வெளியிட்டு வருகிறார். ஒரு சில ட்வீட்கள் தொடர்பாக அவர் சர்ச்சையில் சிக்கியதும் உண்டு.

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்
கடந்த ஆண்டு இறுதியில் பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்ட விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறி இருந்தார். ''எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்" என்று அவர் கூறி இருந்தார்.

நடிகர் சித்தார்த் ஆபாசமான கருத்து
இதனை தொடர்ந்து நடிகர் சித்தார்த் ஆபாசமான மோசமான வார்த்தையால் சாய்னா நேவாலுக்கு பதில் கூறி இருந்தார். சித்தார்த் பெண்களை அவமதிப்பதாக அவருக்கு கடும் கண்டனம் எழுந்தது.
தேசிய மகளிர் ஆணையமும் கடுமையாக கண்டித்து சித்தார்த்துக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. பல்வேறு அரசியல், சினிமா பிரபலங்களும் சித்தார்த்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தனது செயலுக்கு மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த் '' ஆபாசமாக பதிவு செய்ய வேண்டும் என்கிற எந்தவொரு உள்நோக்கமும் எனக்கு இல்லை. யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை'' என்று விளக்கம் அளித்தார்.

போலீசில் புகார்
இதன்பின்னர் இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் நடிகர் சித்தார்த்தை மன்னித்து விட்டதாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் டுவிட்டரில் கூறி இருந்தார். நடிகர் சித்தார்த் மீது தெலங்கானா மாநிலம் ஐதராபாத் போலீசாரும் ஐபிசி் பிரிவு 509 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சென்னை காவல் துறையிலும் சித்தார்த் மீது கிரிமினல் வழக்கு அல்ல. அவதூறு வழக்கு உள்ளது என்று இரண்டு புகார்கள் கொடுக்கப்பட்டன.
Recommended Video

மன்னிப்பு கேட்டார்
இதன்பின்னர் சென்னை போலீசார் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பினார்கள். மேலும், அவரிடம் சென்னை போலீசார் விசாரணை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சாய்னா நேவால் குறித்து ஆபாசமாக கருத்து பதிவிட்டது தொடர்பாக சித்தார்த் மன்னிப்பு கேட்டதாக சென்னை காவல்துறை கூறியுள்ளது. காணொளி மூலம் நடந்த விசாரணையில் தனது செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்டு கொண்டதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications