சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணித்தால் அபராதம்.. ரயில்வே எச்சரிக்கை
சென்னை: சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் அரசு ஊழியர்களுக்காக மட்டும் இயக்கப்படும் நிலையில் இதில் பொதுமக்களும் பயணித்து வருகிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் ரயில்வே, இனி ரயில்களில் பொதுமக்கள் பயணித்தால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. 166 நாட்களுக்கு பிறகு மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து சேவை கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கியது. சென்னையில் புறநகர் ரயில் சேவை செப்டம்பர் 5ம் தேதி முதல் தொடங்கியது. ஆனால் அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்காக மட்டுமே அந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை கடற்கரை- செங்கல்பட்டுக்கும், மூர்மார்க்கெட் முதல் கும்மிடிப்பூண்டி, அரக்கோணத்துக்கும் தினமும் 42க்கும் மேற்பட்ட புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயில்களில் அரசு அங்கீகரித்துள்ள ஊழியர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களும் அனுமதியின்றி பயணம் செய்கிறார்கள்.
இதனால் ரயில்களில் சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதை தடுக்க புறநகர் மின்சார ரயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் பயணிகளின் அடையாள அட்டைகளை வாங்கி சோதனை செய்து வருகிறார்கள். ஆனாலும் பொதுமக்கள் பயணம் செய்வதை தடுக்க முடியவில்லை.
இதையடுத்து ரயில்களில் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய நடவடிக்கையாக உரிய அனுமதி அடையாள அட்டை இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 200 முதல் ரூ. 300 வரை அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி அத்தியாவசிய பணியாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பொதுமக்கள் யாரும் பயணம் செய்ய கூடாது. மீறி பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications