தமிழக பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் தேவை.. மக்கள் எதிர்பார்ப்பு என்ன? நமது வாசகர்கள் கருத்துக்கள்
சென்னை: தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட், சட்டசபையில் ஆகஸ்ட் 13ம் தேதி வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால், தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. காகிதமற்ற பயன்பாட்டை உருவாக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதேபோல தமிழக வரலாற்றில் முதல் முறையாக, வேளாண் துறைக்கான தனி பட்ஜெட், 14ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
இரு பட்ஜெட் மீதான விவாதங்களும் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கி 19ம் தேதி நிறைவடைய உள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி முதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது.
இந்த நிலையில், ஒன் இந்தியா தமிழ் வாசகர்களிடம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் வாயிலாக, பட்ஜெட் பற்றிய எதிர்பார்ப்பை கேட்டிருந்தோம். நமது வாசகர்கள் அளித்த கருத்துக்கள் இதோ உங்களுக்காக:
பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்களை முதலில் பார்க்கலாம்:

ஓய்வு பெறும் வயது
Anbarasan Muthaiah: ஓய்வு பெறும் வயதை மீண்டும் 58 ஆக்க வேண்டும். Vimal Vimal : உண்மையாக வெளிப்படைத் தன்மையோடு நாட்டு மக்களுக்கு எல்லாவிதத்திலும் முடிந்த அளவுக்கு சிறிதளவு உதவி செய்தாலே அது வெற்றிதான். பாஜகவும் அதிமுகவும் செய்யத் தவறியதை திமுக கண்டிப்பாக செய்யும் மக்கள் நாங்கள் வரவேற்போம் மக்களின் ஆட்சி திமுக ஆட்சி

டீ, வடை பாக்கி, நஷ்டம்
Babu Sekar: நாளைய பட்ஜெட் தாக்கலின் போது சட்டசபையில் விவாதத்தின்போது டீ, வடை பாக்கி ஒரு நாளைக்கு எவ்வளவு நஷ்டம் என்று தாக்கல் செய்ய போகிறார்கள்.

இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும்
Hussainasi Hnj: முதலில் இலவசங்களை அனைத்தும் ரத்து செய்ய வேண்டும், ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை தவிர்த்திடவும், மிடில்கிளாஸ் வாழ்க்கையை மேம்படுத்தும், இருக்கிறவனை கூடுதலாக முன்னேற்றுவதை விட்டுவிட்டு, இல்லாதவனை முன்னேற்றி விட வேண்டும். தமிழ்நாட்டு முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும்.

வரியை கூட்டுவார்கள்
Vimal Santhosh: வீட்டு வரி, தண்ணி வரி, குப்பை வரி உயர்வு... விவசாய, நகை கடன் ரத்து செய்ய தாமதம்... இப்படித்தான் அறிவிப்புகள் இருக்கும்.

மனுக்களுக்கு தீர்வு
இவ்வாறு பேஸ்புக்கில் வாசகர்கள் கருத்து சொன்ன நிலையில், ட்விட்டரில் @RKSP1979 என்ற நெட்டிசன், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மூலம் பெறப்பட்ட மனுக்கள் தீர்வு காண வேண்டும்" என்பதை தனது கோரிக்கையாக முன் வைத்துள்ளார். தொடர்ந்து கருத்துக்கள் பதிவாகிய வண்ணம் உள்ளன.

அரசு ஊழியர்கள் ஓய்வு வயது
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ஆக இருந்ததை, எடப்பாடி பழனிச்சாமி அரசு 60ஆக உயர்த்தியிருந்தது. அதை குறைக்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் இதை பட்ஜெட்டில் அறிவிக்க தேவையில்லை. முதல்வர் 110வது விதியின் கீழ் அறிவிக்கலாம் என்பது, குறிப்பிடத்தக்கது.
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ!












Click it and Unblock the Notifications