சென்னையில் 100 வயதுக்கு மேல் வாழும் 38 பேர்... அதாவது 19 தாத்தா, 19 பாட்டி
சென்னை: சென்னையில் நூறு வயதைத் தாண்டியும் வாழும் 38 பேர் தமிழக அரசால் கவுரவிக்கப் பட்டிருக்கிறார்கள்.
கடந்த திங்கள் கிழமையன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை மாநகரில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டிகள், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழக்கும் விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சென்னையில் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்து வரும் மூத்தக் குடிமக்கள் வரவழைக்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டனர்.
கவுரப்படுத்தப்பட்ட அந்த சென்னை வாழ் மூத்த குடிமக்கள் பற்றிய விவரங்கள் :-

மொத்தம் 38 பேர்....
சென்னை முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 38 பேர் 100 வயதுக்கு மேல் உயிருடன் வாழ்வது தெரிய வந்துள்ளது.

சரிசமமாக...
இதில், சரிசமமாக 19 பேர் ஆண்கள், 19 பேர் பெண்கள்.

மீன் பிரியர்கள்....
அவர்களில் 20 பேர் சைவ உணவும், மீதமுள்ள 18 பேர் இறைச்சியை தவிர்த்து மீன் மட்டுமே கூடுதலாக உண்பவர்கள்.

தீய பழக்கவழக்கம் இல்லை....
இவர்களில் யாரிடமும் மது, புகை போன்ற கெட்ட பழக்கவழக்கங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ருக்மணிப் பாட்டி...
சென்னையில் அதிக வயதில் உயிர் வாழ்பவர் என்ற பெருமை சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடத்தை சேர்ந்த 109 வயதுடைய ருக்மணி அம்மாள் என்பவர் ஆவார்
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications