முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு- ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளனும் அவரது குடும்பத்தினரும் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
Recommended Video
முன்னாள் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் ஆயுள் தண்டனை முடிந்த நிலையிலும் அவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்படவில்லை. இதற்காக தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தப்பட்டது. தமிழக சட்டசபையில் அதிமுக, திமுக அரசுகள் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பின.

தீர்மானம்
எனினும் அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதையடுத்து பேரறிவாளன் கடந்த 2016ஆம் ஆண்டு தன்னை விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

விடுதலைக்கு அச்சாரம்
இந்த நிலையில் விடுதலைக்கு அச்சாரமாக கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு மீது இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பை வெளியிட்டது. அதில் பேரறிவாளன் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

திராவிடர் கழகம்
இதனால் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் திராவிடர் கழகத்தினரும் தமிழ் அமைப்புகளும், பொது மக்களும் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை இந்த தீர்ப்பை வரவேற்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். மற்ற 6 பேரும் விரைவில் விடுதலை செய்யப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள், தந்தை குயில் தாசன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது பேரறிவாளனின் தோள் மீது கையை போட்டு முதல்வர் ஸ்டாலின் ஆரத்தழுவினார். இதையடுத்து அவரின் கைகளை பிடித்து இழுத்து தனது அருகே அமர வைத்துக் கொண்டார். தமிழக அரசின் அழுத்தமான வாதங்களால் தமது விடுதலை சாத்தியமானதையும் பேரறிவாளன் இச்சந்திப்பின் போது குறிப்பிட்டார்.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications