நீதிக்கட்சி + சுய மரியாதை இயக்கம் = திராவிடர் கழகம்! திராவிட இயக்கத்தின் கிழக்கு திசை பெரியார்!
சென்னை: திராவிட இயக்கத்தின் கிழக்கு திசையாக கருதப்படும் பெரியாரின் 144வது பிறந்தநாளான இன்று, உலகம் முழுவதும் உள்ள திராவிட இயக்க ஆதரவாளர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
மனிதர்களில் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு வாழ்நாள் முழவதும் தொண்டாற்றியவர் பெரியார்.
சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகியவற்றுக்காக தொடர்ந்து போராடிய பெரியார், நீதிக்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கத்தில் பயணித்தது பற்றிய ஒரு சிறிய தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

1926 தேர்தல்
1926ஆம் ஆண்டு நவம்பரில் சென்னை சட்டசபைக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிராமணர் அல்லாதோர் கட்சி படுதோல்வியடைத்தது. சுயராஜ்யக் கட்சி வெற்றி பெற்றது. அப்போது சுயராஜ்யக் கட்சியினர் சென்னையில் அமைச்சர் பதவி ஏற்க முயன்றனர். அவர்களுள் யார் முதலமைச்சர் ஆவது என்ற குழப்பம் வந்தது. இதனால் அமைச்சரவை அமைக்காமல் விட்டனர். அச்சமயம் டாக்டர் சுப்பராயன் சுயேச்சைக் கட்சியின் பெயரால் அமைச்சரவையை அமைத்தார். இதனை சுயராஜ்யக் கட்சியினர் பின்னிருந்து ஆதரவளித்தனர்.

நீதிக்கட்சியினர் சோர்வு
இதனிடையே தோல்வியடைந்த நீதிக்கட்சியினர் சோர்ந்து அயர்ந்துவிட்டனர். தலைவர்கள் இவ்வளவுதான் நமது அரசியல் வாழ்வு என்று எண்ணி வீட்டுக்குள் உட்கார்ந்து விட்டனர். ஆனால், பெரியார் சிறிதும் தளர்ச்சியடையவில்லை. தோல்வியும் நன்மைக்கே என்று வீரமுழக்கஞ் செய்தார். அவர் அளித்த ஊக்கம் ஒரு மாநாடாக உருவெடுத்தது. 1926 ஆம் ஆண்டு டிசம்பர் 25, 26ஆம் தேதிகளில் மதுரையில் பிராமணர் அல்லாதோர் மாநாடு நடைபெற்றது.

பனகல் அரசர் மறைவு
வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்தது போல், 16-12-1928 இல் திடீரென்று நீதிக்கட்சித் தலைவர் பனகல் அரசர் இறந்தார். இதனால் நீதிக்கட்சிக்குப் பேரிழப்பு நேர்ந்தது. பனகல் அரசர் இறந்ததால் இயக்கம் தளர்ந்து போய் விடவில்லை என்று மக்கள் உணரும்படி ஊக்கம் ஊட்டி வந்தார் பெரியார். இதன் பலனாக 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17,18-ஆம் நாட்களில் செங்கற்பட்டில் முதல் மாநில சுயமரியாதை மாநாடு நடைபெற்றது.

செங்கல்பட்டு மாநாடு
இம்மாநாட்டிற்கு W.P.A.சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். சமூகச் சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து குழுமினர். தீண்டாமை, ஜாதி பேதம் ஒழிப்பது, மதக் குறிகளை விட்டுவிடுதல், ஜாதியைக் குறிக்கும் பட்டப் பெயர்களை நீக்குதல், புரோகிதத்தை அடியோடு நீக்குதல், கோவில் களில் பூஜை செய்யத் தரகர் கூடாது, கடவுள் வணக்கத்திற்காக ஒரு காசு கூடச் செலவிடக் கூடாது, பெண்களுக்குச் சம உரிமை கொடுப்பது என்பவை போன்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேறின.

திராவிடர் கழகம்
இப்படி நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் ஒரே நேர்கோட்டில் பயணித்த நிலையில் 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு திராவிடர் கழகமாக சேலத்தில் வைத்து பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெரியாரின் விருப்பப்படி சேலம் மாநாட்டில் அண்ணா இதனை நிகழ்த்திக் காட்டினார் என்பது வரலாறு.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications