Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போக்குவரத்து விதிமீறல்.. சென்னையில் விரட்டிவிரட்டி பிடிக்கும் போலீஸ்.. 10 நாள் வசூல் இவ்வளவா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் அமலான 10 நாட்களில் 17,453 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1.41 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறு நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது.

இந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் கடந்த வாரம் முதல் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.

ரூ.10 ஆயிரம் அபராதம்

ரூ.10 ஆயிரம் அபராதம்

அதன்படி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் வாகன ஓட்டுநர் குடிபோதையில் இருந்து, பின்னால் அமர்ந்து செல்வோர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்து போலீஸ்

போக்குவரத்து போலீஸ்

புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் கடந்த அக்.26 முதல் அமலுக்கு வந்த நிலையில், சென்னையில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கும், முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனத்தை இயக்கியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் பல வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையினர் விதித்த அபராத தொகையை செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க போக்குவரத்து போலீசார், நீதிமன்றம் மூலம் வாரண்ட் பெற்று குறிப்பிட்ட வாகன ஓட்டிகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

வாகனங்கள் பறிமுதல்

வாகனங்கள் பறிமுதல்

நீதிமன்ற வாரண்ட் வழங்கி 14 நாட்களுக்குள் வாகன ஓட்டிகள் அபராத தொகை செலுத்தவில்லையென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது போல கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராத தொகை செலுத்தாத 50 வாகன ஓட்டிகளின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்திற்கு விட இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

10 நாளில் ரூ.1.41 கோடி வசூல்

10 நாளில் ரூ.1.41 கோடி வசூல்

சென்னையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. ரூ.1.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 17,453 வழக்குகளுக்குண்டான அபராத தொகை ரூ.70.46 லட்சம் வாகன ஓட்டிகளிடம் பெறப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

போதையில் வாகனம் ஓட்டிய அபராதம்

போதையில் வாகனம் ஓட்டிய அபராதம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 591 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.37.68 லட்சம் ரூபாயை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 2678 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.10.52 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீட் பெல்ட் அணியாத காரணத்திற்காக 340 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 2.62 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+