தை பொங்கல் கொண்டாட சொந்த ஊர் போறீங்களா?ஸ்பெஷல் பஸ் டிக்கெட் ரிசர்வேசன் ஆரம்பம்
சென்னை: தை பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான டிக்கெட் முன்பதிவு அரசு விரைவு பேருந்துகளில் தொடங்கியது. சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் கூட்டத்திற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை, கோவை,திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் இடம்பெயர்ந்த மக்கள் பண்டிகைகளை கொண்டாட சொந்த ஊர் செல்வார்கள். ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தை பொங்கல் பண்டிகைகளை சொந்த ஊர் சென்று கொண்டாடுவார்கள்.

கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று கொண்டாடினர். இதற்கான 16ஆயிரம் சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டது.
தமிழகத்தில் வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். 90% க்கும் மேற்பட்ட மக்கள் அரசு பேருந்துகளையே பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து கழகம் சார்பில் 300 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட பகுதிகளுக்கு விரைவு, சொகுசு மற்றும் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளுக்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துறை அதிகாரிகள், பொங்கலுக்காக ஜனவரி11ஆம் தேதி பயணம் செய்வதற்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கியது.
அடுத்தடுத்த நாட்களுக்கும் முன் பதிவு செய்யலாம். தற்போது குறைந்த அளவே முன்பதிவு செய்துள்ளனர். பொங்கல் நெருங்கும் போது இது அதிகரிக்கும். சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் கூட்டத்திற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications