பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் போறீங்களா? செப்.12 முதல் ரயில் டிக்கெட் ரிசர்வேசன்
சென்னை:2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு சென்னையில் வசித்துவரும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள். சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களுக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது.
பண்டிகை வந்தாலே அதை குடும்பத்தோடும் உறவினர்களோடும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். நவராத்திரி, தீபாவளி, பொங்கல் பண்டிகை என வரிசையாக பண்டிகைகள் வர உள்ளன. தொடர் விடுமுறையும் வர உள்ளதால் படிக்கவும், வேலை செய்யவும் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.
சென்னை, கோவை, திருப்பூர், உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். தென்னக ரயில்வேயும் ரயில் முன்பதிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தை பொங்கல் பண்டிகை
2023ஆம் ஆண்டு ஜனவரி 14ல் போகி பண்டிகை துவங்கி, 17ம் தேதி வரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் IRCTC இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்வர்.

ரயில் டிக்கெட் முன்பதிவு
தை பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர் வரும் 12ம் தேதி முதல் தங்களது பயணத்திற்கு ஏற்ப ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன் டிக்கெட் எடுத்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் முன்கூட்டியே ரயில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

முன்பதிவு எப்போது
பொங்கல் பண்டிகைக்கு செல்வோர், அடுத்த வாரம் முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி ஆம்10ம் தேதி பயணிக்க விரும்புவோர் வரும் 12ம் தேதியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, முன்பதிவு துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடும். ஏற்கனவே, தீபாவளிக்கு அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளன. காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களை தேர்வு செய்து சிறப்பு ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகள் இணைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications