"ஜெர்க்" ஆன பாஜக.. கதறவிடும் பிகே.. ஸ்டாலினின் பங்கு என்ன.. சரத்பவார் கணக்கு ஒர்க் அவுட் ஆகுமா?
தேசிய அரசியலில் திமுக எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது
சென்னை: 3வது அணி கிடையாதாம்.. ஆனால், பாஜகவுக்கு எதிராக அணி திரள்வது என்று தேசிய அரசியல் நகர்கிறது.. சரத்பவாருடனான சந்திப்புக்கு பிறகு பிரசாந்த் கிஷோர் என்ன திட்டத்தில் உள்ளார்? ஒருவேளை பாஜகவுக்கு எதிரான அணியில் திமுகவும் முக்கிய இடத்தை பெறுமா என்ற ஆர்வம் எழுந்துள்ளது..!
நடந்த முடிந்த 5 மாநில தேர்தலில் குறைந்தபட்சம் 3 மாநிலங்களிலாவது பாஜக ஆட்சியை பெற நினைத்து.. இதற்காக பாடுபட்டு உழைத்தது..
ஆனால், மேற்கு வங்கத்தில் மம்தா ஒற்றை நபராக கெத்து காட்டி விட்டார்.. கேரளாவிலும் சரி, நம்மிடமும் சரி, பாஜகவால் எதுவுமே செய்ய முடியாத சூழல் உள்ளது.. அசாமில் மட்டும் ஆட்சியை தக்க வைத்தது.

5 மாநிலம்
இந்த 5 மாநில தேர்தலில் மிக அதிகமாக பேசப்பட்டவர் பிரசாந்த் கிஷோர்.. மம்தாவுக்கு இவர்தான் ஆலோசகர்.. இவர் கடந்த சில நாட்களாகவே முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.. அப்படித்தான் சரத்பவாரையும் சந்தித்து பேசினார். எதற்காக சரத்பவாரை இவர் பார்த்து பேசுகிறார்? ஒருவேளை பாஜகவுக்கு எதிராக 3ஆவது அணியை அமைக்க போகிறார்களோ? என்ற எண்ணம் வலுத்தது.

3வது அணியா?
ஆனால், அப்படி எதுவுமே இல்லை என்றும், 3வது, 4வது அணியெல்லாம் சாத்தியமில்லை என்றும் பிகே தெளிவுபடுத்திவிட்டார். அப்படியானால் ஏன் இந்த சந்திப்பு? என்ற கேள்வி எழுகிறது. சரத் பவாரை பொறுத்தவரை பழுத்த அரசியல்வாதி.. காங்கிரஸ் கட்சிக்கு தலைமை பதவியை ராகுல் ஏற்க மறுத்து வரும் நிலையில், சரத் பவார் ஒருவேளை அந்த பதவியை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே கிளம்பியது..

தேசியவாத காங்கிரஸ்
அப்படி காங்கிரசுக்கு தலைமை வகிக்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை, காங்கிரசுடன் இணைப்பாரோ? என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால், சரத்பவார் ஆதை மறுத்துவிட்டார்.. ஐமு கூட்டணி தலைவர் பொறுப்பை ஏற்பதில் சுத்தமா ஆர்வமும் இல்லை.. நேரமும் இல்லை... என்று சொல்லிவிட்டார்.

சரத்பவார்
அப்படியானால், காங்கிரசுக்கு எதிரான மனநிலைமையிலேயே சரத்பவார் இப்போதும் இருக்கிறாரா? காங்கிரசுக்கு கல்தா தரப்போகிறாரோ? வரப்போகும் தேர்தலை கணக்கில் கொண்டு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பாரோ,? இதற்குதான் பிரசாந்த் கிஷோர் உதவி செய்ய போகிறாரோ என்பன போன்ற சந்தேகங்களும் எழுகின்றன.

எம்பி தேர்தல்
2024 எம்பி தேர்தலில் பாஜகவுக்கு மாற்று சக்தியாக எதிர்கட்சிகளை அணி திரட்டும் அசைன்மெண்ட் பிரசாந்த் கிஷோருக்கு தரப்பட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டி உள்ளது... பாஜகவுக்கு அதாவது மோடிக்கு எதிராக பொதுவான ஒரு வேட்பாளரை களமிறக்குவது குறித்த பரிசீலனையையும் பிரசாந்த் கிஷோர் தொடங்கியிருப்பதாக தெரிகிறது..

முக ஸ்டாலின்
ஏற்கனவே மம்தாவின் நம்பிக்கையை பிகே பெற்றுள்ள நிலையில், நிச்சயம் திமுகவின் ஆதரவையும் பிகே பெறுவது எளிதானதே.. ஏனெனில், ஆரம்பம் முதலே, "ஆண்ட்டி மோடி" என்ற ரீதியில் பல்வேறு விஷயங்களை கையில் எடுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.. அது ஜிஎஸ்டி சம்பந்தமாக 12 மாநில முதல்வர்களுக்கும் லெட்டர் எழுதியதாகட்டும், இலவச தடுப்பூசி, நீட் பிரச்சனைகளுக்கு கடிதம் எழுதியதாகட்டும், அனைத்திலுமே ஸ்டாலினின் பல்ஸ் அறிய முடிகிறது.

திமுக
அதாவது மாநிலங்கள் எந்தெந்த விஷயங்களில் சம்பந்தப்பட்டுள்ளதோ, அந்த பிரச்சனைகள் தொடர்பாக தன்னிடம் ஒருங்கிணைத்து கொண்டு, மத்திய அரசுக்கு வலியுறுத்தும் போக்கைதான் ஸ்டாலின் நடத்தி வருகிறார்.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், மத்திய அரசுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, அதன்மூலம் தன்னை தேசிய லெவலுக்கு உயர்த்தும் முயற்சியாகவே இது பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிகேவின் பிளானும் இதில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவால்கள்
ஆக மொத்தம், பாஜகவுக்கான எதிர்ப்பு அரசியல் வலுவாகி கொண்டிருக்கிறது என்பதும், இப்படி பிராந்திய கட்சிகளை ஒன்றிணைப்பதும் பாஜகவுக்கு நிச்சயம் சவாலாக இருக்கும் என்பது சந்தேகமில்லை.. ஆனால் அதேசமயம், இதற்கு முன்பும் இப்படித்தான் அன்று அனைத்து பிராந்திய கட்சிகளையும் இணைத்துதான், இந்திரா காந்தியே தோல்வியை தழுவினார் என்பதையும் மறுப்பதற்கில்லை.. இனி, பாஜகவுக்கு எதிராக திரளும் அணி வெற்றி பெறுமா? பார்ப்போம்.
-
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications