சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. கையில் பூங்கொத்துடன் பிடிஆர்.. நடந்த சந்திப்பு
சென்னை: சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார். சென்னை வந்த நிர்மலா சீதாராமனுக்கு பூங்கொடுத்து கொடுத்து வரவேற்ற பிடிஆர், மரியாதை நிமர்த்தமாக சந்தித்து பேசினார் . ந்த சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.
சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்காக 65 கோடி ரூபாய் செலவில் 243.48 சதுர மீட்டர் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.
சிகரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த குடியிருப்பு வளாகத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வருவாய் செயலர் தருண் பஜாஜ், மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் மொஹபத்ரா, வருமான வரித்துறை தலைமை ஆணையர் டி. சி. பட்வாரி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வருமான வரித்துறை
முன்னதாக இன்று காலை சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய மறைமுக மற்றும் நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதேபோல வருமான வரித்துறை அதிகாரிகளுடன் மதியம் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின்னர் மாலையில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கான அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்தார்.

சந்திப்பு
இதனிடையே சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மரியாதை நிமர்த்தமாக சந்தித்து பேசினார். அப்போது பிடிஆர், நிர்மலா சீதாராமனுக்கு பூங்கொடுத்து வரவேற்றார். இந்த சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.

பெட்ரோல் டீசல் விலை
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை விவகாரம், பெட்ரோல் டீசல் விலை விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருபவர் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அவர் இன்று சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

ஆலோசனை
இரண்டு நாள் பயணமாக தமிழகம் மற்றும் தெலுங்கானாவிற்கு வந்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத் செல்கிறார். அங்கு மத்திய மறைமுக மற்றும் நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அதேபோல் வருமான வரித்துறை அதிகாரிகளுடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.












Click it and Unblock the Notifications