ரம்ஜான் பண்டிகை இன்று வீடுகளிலேயே எளிமையாக கொண்டாட்டம் - குடும்பத்துடன் தொழுகை
கொரோனா கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே, ரம்ஜான் பண்டிகையை எளிமையாக கொண்டாடினர்.
சென்னை: ஈகைத்திருநாள் என போற்றப்படும் ரம்ஜான் பெருநாள் இன்று தமிழகம் முழுவதும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர். வீட்டின் மொட்டை மாடிகளிலும் தனிமனித இடைவெளியை பின்பற்றி, குடும்பத்தினருடன் தொழுகை செய்தனர்.
ரம்ஜான், ரமலான் பண்டிகை என்று சக மக்களால் அழைக்கப்படும் இந்தப் பண்டிகையை ஈதுல் ஃபித்ர் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் நாட்காட்டி சூரியனின் இயக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
இஸ்லாமியர்கள் சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையிலேயே மாதங்களைக் கணக்கிடுவர். ரமலான் மாதம் இறைவனை நெருங்கவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் கருதுகின்றனர்.
இஸ்லாமிய நாள்காட்டியில் ஒன்பதாவது மாதமான ரமலானில் நோன்பு தொடங்குவார்கள். சந்திர உதயத்தைப் பொருத்து பிறை தென்படுவதைப் பொருத்தும் சில நாடுகளில் கால வேறுபாடுகளுடன் நோன்பு தொடங்கும்.
30 நாட்கள் நோன்பு இருந்து இறைவழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். முஸ்லிம்கள் அனைவருக்கும் நோன்பு கட்டாயம், நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போலவே உங்கள் மீதும் அது விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் தூய்மையுடையவர்கள் ஆகிறீர்கள் என்கிறது இஸ்லாமிய இறைவாக்கு.
வளைகுடா நாடுகளில் நேற்றைய தினம் ரம்ஜான் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் கேரளா, கன்னியாகுமரியிலும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது.
சென்னை, மதுரை, திருச்சியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர். கோவையில் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான ஜாக் கமிட்டி சார்பில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக, காலையிலேயே அவரவர் தங்களது வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர். சிலர், வீட்டின் மொட்டை மாடிகளிலும் தனிமனித இடைவெளியை பின்பற்றி, குடும்பத்தினருடன் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் ரம்ஜான் பண்டிகை எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொலைபேசி மூலம் உறவினர்களிடம் பேசி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications