Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கத்தில் போய் திண்டாட வேண்டாம்.. லீவுக்கு சொந்த ஊருக்கு போறவங்களுக்கு குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரம்ஜான் பண்டிகை மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு முழுவதும் 1,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்பிறகு வார விடுமுறை தினங்கள் வருகின்றன. இதனால், சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். இதனால், பயணிகள் கூட்டம் அலைமோதும் எனத் தெரிகிறது.

Ramzan Festival Weekend Holidays 1 265 special buses across Tamil Nadu

எனவே பயணிகளின் தேவைய கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக தமிழக அரசு இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் 1,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகை: இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டியும், வரும் 13, 14-ம் தேதிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டும் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை, நாளை மறுநாள்: இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 315 பேருந்துகளும் வெள்ளிக்கிழமை 290 பேருந்துகளும் , சனிக்கிழமை 340 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை: அதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது. 10 ஆம் தேதி 40 பேருந்துகளும் 12- ஆம் தேதி 40 பேருந்துகளும் 13-ந் தேதிகளில் 40 பேருந்துகளும் என 120 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

செல்போன் செயலி: பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் புக்கிங் செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+