கிளாம்பாக்கத்தில் போய் திண்டாட வேண்டாம்.. லீவுக்கு சொந்த ஊருக்கு போறவங்களுக்கு குட் நியூஸ்
சென்னை: ரம்ஜான் பண்டிகை மற்றும் வார விடுமுறை தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு முழுவதும் 1,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்பிறகு வார விடுமுறை தினங்கள் வருகின்றன. இதனால், சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். இதனால், பயணிகள் கூட்டம் அலைமோதும் எனத் தெரிகிறது.

எனவே பயணிகளின் தேவைய கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக தமிழக அரசு இந்த ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் 1,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகை: இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரம்ஜான் பண்டிகை வருகிற 11-ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டியும், வரும் 13, 14-ம் தேதிகள் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்களை முன்னிட்டும் சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை, நாளை மறுநாள்: இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 315 பேருந்துகளும் வெள்ளிக்கிழமை 290 பேருந்துகளும் , சனிக்கிழமை 340 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை: அதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது. 10 ஆம் தேதி 40 பேருந்துகளும் 12- ஆம் தேதி 40 பேருந்துகளும் 13-ந் தேதிகளில் 40 பேருந்துகளும் என 120 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
செல்போன் செயலி: பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் புக்கிங் செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications