பள்ளி மாணவர்கள் திறனறித்தேர்வை தமிழில் நடத்த கோரிக்கை.. மதுரை எம்.பி.க்கு மத்திய அரசு பதில்!
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான ஆன்லைன் திறனறித் தேர்வினை மாநில மொழிகளிலும் நடத்தக்கோரி மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியிருந்த கடிதத்திற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்துள்ளார்.
மதுரை எம்பி சு.வெங்கடேசன் சில தினங்களுக்கு முன், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் 'கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (KVPY) என்கிற திட்டத்தின் அடிப்படையில் அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் என்ன செய்வார்கள்?
+1 , +2 மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு உதவித் தொகை(ரூ 80,000 இல் இருந்து ரூ 1,12,000) வழங்கப்டுகிறது. ஆனால் திறனறித் தேர்வு இரண்டு மொழிகளில் வினாத்தாள் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மட்டுமே. மாநில மொழிகளில் +1, +2 கல்வி பயிலும் மாணவர்கள் என்ன செய்வார்கள்?

மாநில மொழியில் தேர்வு வேண்டும்
இந்தியில் எழுதலாம். ஆனால் தமிழில் எழுத முடியாது என்றால் அது சமதள ஆடுகளத்தை எப்படி உறுதி செய்யும்? அறிவியல் முனைப்பிற்கும் ஆங்கிலம், இந்திக்கு என்ன சம்பந்தம்? ஆகவே அரசு மாநில மொழிகளிலும் வினாத் தாள்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். மாநில மொழியில் தேர்வு நடத்த வேண்டும்' என்று கூறியிருந்தார்.

வாக்குமூலமாக தெரிவிக்கப்படும்
இந்த நிலையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் எழுதியிருந்த கடிதத்திற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இது குறித்து வழக்கு நிலுவையில் இருப்பதால் மத்திய அரசின் நிலை உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலமாக தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நீதி தருவதாக இருக்கட்டும்
இதனை தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி, 'அறிவியல் முனைப்புக்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு? KVPY-மாணவர் உதவித் தொகைக்கான ஆன்லைன் தேர்வை தமிழிலும் நடத்த கடிதம் எழுதியிருந்தேன். எனது கோரிக்கையை பரிசீலித்ததாகவும், வழக்கு இருப்பதால் அரசின் நிலை வாக்குமூலமாக உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் தெரிதித்துள்ளார். அரசின் பதில் தமிழக மாணவர்களுக்கு நீதி தருவதாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications