"டிரைவிங் லைசென்ஸ்" மக்களுக்கு 2 நாட்கள் மட்டுமே அனுமதி.. ஆர்டிஓ அலுவலக நடைமுறையில் மாற்றம்!
சென்னை: மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கடந்த ஒரு மாதமாக பின்பற்றி வந்த நடைமுறை, மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும். 18 வயது நிரம்பிய ஆண்கள், பெண்கள் அனைவரும் வாகனங்களை இயக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
அப்படி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாரத்தில் ஐந்து நாட்கள் இயங்கும்.

பயிற்சி பள்ளிகள் ஆதிக்கம்
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதேபோல் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அண்மைக் காலமாக வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் தொடர்பாக மக்களிடம் இருந்து பெறப்படும் நேரடி விண்ணப்பங்களுக்கு தாமதம் ஏற்படுவதாகவும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் புகார்கள் எழுந்தது.

புதிய நடைமுறை
இதையடுத்து போக்குவரத்து துறை ஆணையர் தரப்பில் இருந்து வட்டார போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு கடந்த செப்டம்பரில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் 'வாரத்தின் திங்கள், வியாழன், வெள்ளி மூன்று நாட்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். செவ்வாய், புதன் இரு நாட்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.

பயிற்சி பள்ளிகள் வேலைநிறுத்தம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கடந்த மாதம் 13ம் தேதி முதல் ஒரு வாரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் செப்.20ம் தேதிக்கு பின்னர் ஓட்டுநர் உரிமத் தேர்வில் பங்கேற்க அவர்கள் முன்பதிவு செய்ய முயற்சித்தனர்.
ஆனால், பலரால் முன்பதிவு செய்ய முடியவில்லை. தொடர்ந்து இந்த நடைமுறை காரணமாக தங்களுக்கு பாதிப்புஏற்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சரிடம் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

நடைமுறையில் மாற்றம்
அதன்பேரில், மீண்டும் ஆலோசனை நடத்தி, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் ஒதுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் திங்கள், வெள்ளி இரு தினங்கள் மட்டும் பொதுமக்களிடம் இருந்து நேரடி விண்ணப்பம் பெற்று தேர்வு நடத்த வேண்டும் எனவும், செவ்வாய், புதன், வியாழன் மூன்று நாட்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளி விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications