"டிரைவிங் லைசென்ஸ்" மக்களுக்கு 2 நாட்கள் மட்டுமே அனுமதி.. ஆர்டிஓ அலுவலக நடைமுறையில் மாற்றம்!
சென்னை: மக்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கடந்த ஒரு மாதமாக பின்பற்றி வந்த நடைமுறை, மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வழங்கப்படும். 18 வயது நிரம்பிய ஆண்கள், பெண்கள் அனைவரும் வாகனங்களை இயக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
அப்படி ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கினால், போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாரத்தில் ஐந்து நாட்கள் இயங்கும்.

பயிற்சி பள்ளிகள் ஆதிக்கம்
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதேபோல் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அண்மைக் காலமாக வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் தொடர்பாக மக்களிடம் இருந்து பெறப்படும் நேரடி விண்ணப்பங்களுக்கு தாமதம் ஏற்படுவதாகவும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் புகார்கள் எழுந்தது.

புதிய நடைமுறை
இதையடுத்து போக்குவரத்து துறை ஆணையர் தரப்பில் இருந்து வட்டார போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு கடந்த செப்டம்பரில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் 'வாரத்தின் திங்கள், வியாழன், வெள்ளி மூன்று நாட்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும். செவ்வாய், புதன் இரு நாட்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.

பயிற்சி பள்ளிகள் வேலைநிறுத்தம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கடந்த மாதம் 13ம் தேதி முதல் ஒரு வாரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் செப்.20ம் தேதிக்கு பின்னர் ஓட்டுநர் உரிமத் தேர்வில் பங்கேற்க அவர்கள் முன்பதிவு செய்ய முயற்சித்தனர்.
ஆனால், பலரால் முன்பதிவு செய்ய முடியவில்லை. தொடர்ந்து இந்த நடைமுறை காரணமாக தங்களுக்கு பாதிப்புஏற்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சரிடம் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

நடைமுறையில் மாற்றம்
அதன்பேரில், மீண்டும் ஆலோசனை நடத்தி, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் ஒதுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் திங்கள், வெள்ளி இரு தினங்கள் மட்டும் பொதுமக்களிடம் இருந்து நேரடி விண்ணப்பம் பெற்று தேர்வு நடத்த வேண்டும் எனவும், செவ்வாய், புதன், வியாழன் மூன்று நாட்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளி விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications