கிளம்பிட்டாருய்யா கிளம்பிட்டார்.. அக்.9 முதல் 11 ஆம் தேதி வரை 3 நாட்கள் கொங்கு ஈஸ்வரன் நடைபயணம்!
சென்னை: சேலம் -உளுந்தூர்பேட்டை இடையே அக்.9 முதல் 11 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபயணம் மேற்கொள்ளவுள்ளதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சேலம் உளுந்தூர்பேட்டை இடையே அனைத்து பகுதிகளையும் நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்றும் சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும் இந்த நடைபயணத்தை அவர் நடத்துகிறார்.
இது தொடர்பான விவரம் வருமாறு;

அப்பாவி மக்கள்
அப்பாவி பொதுமக்களின் உயிரை காவு வாங்கும் சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஒன்பது இடங்களில் நான்கு வழிச்சாலை இருவழிச்சாலையாக மாறுகிறது. இருவழிச்சாலையாக இருக்கிற பகுதி 37 கிலோமீட்டர் நீளம் கொண்டது.தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக செல்லும் கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் பயணித்துவிட்டு திடீரென அகலம் குறுகிய இருவழிச் சாலைக்கு மாறும் பொழுது வாகனங்கள் அதிக அளவில் விபத்துகளில் சிக்குகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

4,000 விபத்துக்கள்
அவற்றில் ஒரு சில பெரிய அளவிலான விபத்துக்கள் மட்டுமே வெளியே தெரிகிறது. மேலும் பல சிறு விபத்துகள் வெளியே தெரிவதில்லை. அண்மையில் வந்த செய்தி மற்றும் புள்ளி விவரங்களின் படி கடந்த 11 வருடங்களில் 1050 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பதும், 4000க்கும் மேற்பட்ட விபத்துகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டு படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றும் அதில் பலர் ஊனத்துடனும் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் மிகவும் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.

காவு வாங்கும் சாலை
காவு வாங்கும் இந்த சாலையை பொதுமக்கள் மிகுந்த மரண பயத்துடன் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தின் மேற்கு பகுதி சென்னையுடனும் மற்றும் நாட்டின் மற்ற பகுதியுடனும் இணைக்கின்ற சாலை. அதனால் போக்குவரத்து மிக அதிகமாக உள்ள சாலையாக இது உள்ளது. இது சம்பந்தமாக நான் தமிழக சட்டமன்றத்தில் கள நிலவரத்தை விளக்கி பேசி உள்ளேன். இருவழிச் சாலை முழுவதையும் நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளேன்.

பணிகள் ஆரம்பிக்கவில்லை
நெடுஞ்சாலை துறை அமைச்சரும் சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஆனாலும் உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுகின்ற பணிகள் தொடங்கப்படவில்லை. தமிழக அரசும், ஒன்றிய அரசும் கலந்து ஆலோசித்து போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை முழுவதுமாக நான்கு வழிச்சாலையாக மாற்றிக் கொடுக்க வேண்டும்.

3 நாள் நடைபயணம்
எனவே சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து பகுதிகளும் நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் மாற்றும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தியும் வருகின்ற அக்டோபர் மாதம் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக நடைபயணம் மேற்கொள்ள விருக்கிறோம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications