மழை விடுமுறை...அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் விடுமுறை நாட்களில் கருத்தில் கொண்டு அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் விடுமுறை நாட்களில் கருத்தில் கொண்டு அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. தீபாவளி, தொடர்மழை என பள்ளிகளுக்கு கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகளை திறக்க பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருப்பதாலும், ஆன்லைன் கல்வியினாலும் மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படக்கூடும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. நவம்பர் 1 முதல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.முதல் இரண்டு வாரங்கள் மாணவர்களுக்கு நடனம், நாடகம், பாடல் ஆகியவை கற்றுத் தரப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
மாணவர்கள் பொதுத் தேர்வை நேரடியாக எழுத செல்லும் போது பயப்பட நேரிடும். இதனால் மாணவர்களின் பயத்தை போக்கும் வகையில் ஜனவரி, மார்ச் மாதத்தில் மாணவர்களுக்கு மாடல் தேர்வு நடத்தப்படும் என்று இரு தினங்களுக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர்கள் பொதுத் தேர்வில் எந்த ஒரு பயமும் தயக்கமின்றி எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கூறியுள்ளார்.
தீபாவளிப் பண்டிகை, தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கடந்த ஒரு வாரகாலமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை சில மாவட்டங்களில் ஓய்ந்தாலும் கன்னியாகுமரியில் மழை, வெள்ளம் நீடிக்கிறது. இந்த நிலையில் மழை ஓய்ந்த பகுதிகளில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விடுமுறை நாட்களில் கருத்தில் கொண்டு அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. தீபாவளி, தொடர்மழை என பள்ளிகளுக்கு கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகளை திறக்க பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications