மழை விடுமுறை...அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் விடுமுறை நாட்களில் கருத்தில் கொண்டு அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் விடுமுறை நாட்களில் கருத்தில் கொண்டு அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. தீபாவளி, தொடர்மழை என பள்ளிகளுக்கு கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகளை திறக்க பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பள்ளிகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருப்பதாலும், ஆன்லைன் கல்வியினாலும் மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படக்கூடும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. நவம்பர் 1 முதல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன.முதல் இரண்டு வாரங்கள் மாணவர்களுக்கு நடனம், நாடகம், பாடல் ஆகியவை கற்றுத் தரப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
மாணவர்கள் பொதுத் தேர்வை நேரடியாக எழுத செல்லும் போது பயப்பட நேரிடும். இதனால் மாணவர்களின் பயத்தை போக்கும் வகையில் ஜனவரி, மார்ச் மாதத்தில் மாணவர்களுக்கு மாடல் தேர்வு நடத்தப்படும் என்று இரு தினங்களுக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அவர்கள் பொதுத் தேர்வில் எந்த ஒரு பயமும் தயக்கமின்றி எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கூறியுள்ளார்.
தீபாவளிப் பண்டிகை, தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கடந்த ஒரு வாரகாலமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை சில மாவட்டங்களில் ஓய்ந்தாலும் கன்னியாகுமரியில் மழை, வெள்ளம் நீடிக்கிறது. இந்த நிலையில் மழை ஓய்ந்த பகுதிகளில் நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விடுமுறை நாட்களில் கருத்தில் கொண்டு அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்துள்ளது. தீபாவளி, தொடர்மழை என பள்ளிகளுக்கு கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் அதை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகளை திறக்க பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications