பெருமை.. நோபல் பரிசு பெற்ற அபிஜித்திற்கு பின்னிருக்கும் தமிழர்.. யார் இந்த செந்தில் முல்லைநாதன்?!
Recommended Video
சென்னை: பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற இந்தியரான அபிஜித் பானர்ஜிக்கு பின் தமிழரான செந்தில் முல்லைநாதன் என்பவர் இருந்துள்ளார்.
நோபல் பரிசுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்ற வருடத்தை விட இந்த வருட மிகவும் பரந்துபட்ட தன்மையுடன் பல நாட்டை சேர்ந்த நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்று இந்தியர் ஒருவருக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. அமெரிக்கா வாழ் இந்தியரான அபிஜித் பானர்ஜி இந்த நோபல் பரிசை பெற்று இருக்கிறார்.

தனியாக இல்லை
அதிலும் இவர் தனியாக இந்த பரிசை பெறவில்லை. அவரின் காதல் மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் மெக்கேல் கிரெமர் ஆகியோருக்கு கூட்டாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வறுமையை ஒழிப்பது தொடர்பான இவர்கள் செய்த ஆய்வுதான் இந்த பரிசுக்கு காரணம்.

சென்னை தொடர்பு
இந்த பொருளாதார ஆய்வுக்காக மொத்தம் 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் பானர்ஜி அப்பா அம்மா இரண்டு பேருமே பொருளாதாரப் பேராசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் அப்பா சென்னை பிரெசிடென்சி கல்லூரியில்தான் படித்து இருக்கிறார்.

என்ன ஆய்வு
இவரின் இந்த நோபல் பரிசுக்கு பின் தமிழர் ஒருவரின் உழைப்பும் இருக்கிறது. அபிஜித், எஸ்தர் இவர்கள் இருவருடன் சேர்ந்து செந்தில் முல்லைநாதன் என்ற ஆய்வாளர் செய்த ஆராய்ச்சிக்குத்தான் இந்த பரிசு வழங்கி இருக்கிறார்கள். அப்துல் லத்தீப் ஜெமீல் போவார்ட்டி ஆக்ஷன் லேப் (Abdul Latif Jameel Poverty Action Lab) என்ற மையத்தை உருவாக்கி இவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

உலக வறுமை
உலகம் முழுக்க எப்படி வறுமையை ஒழிப்பது. எளிதான திட்டங்களை எப்படி கொண்டு வருவது. மக்களிடம் பண புழக்கத்தை எப்படி அதிகரிப்பது என்று இவர்கள் மூவரும் நிறைய திட்டங்களை வகுத்து இருக்கிறார்கள். இதில் செந்தில் முல்லைநாதன் முக்கியமான பல திட்டங்களை, ஐடியாக்களை அளித்து இருக்கிறார்.

செந்தில் முல்லைநாதன் யார்
செந்தில் முல்லைநாதன் அமெரிக்காவில் பேராசிரியராக இருக்கிறார். ஹார்வேர்ட், எம்ஐடி பல்கலைகளில் இவர் பல வருடம் பொருளாதார துறையில் பேராசிரியராக இருந்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர் 1980களில் அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.

என்ன புறக்கணிப்பு
இந்த நிலையில் இவர் நோபல் பரிசின் போது புறக்கணிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. செந்தில் செய்த பணிகளை நோபல் குழு கருத்தில் கொள்ளவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications