தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமனம்- ஆளுநர் அதிகாரப்பூர்வ உத்தரவு!
சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக முன்னாள் எம்.பி. சண்முகசுந்தரம் நியமிக்கப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதனைத் தொடர்ந்து அரசு நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய தலைமை செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். அதேபோல் முதல்வரின் செயலாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன் உள்ளிட்ட 4 பேர் நியமிக்கப்பட்டனர்.
தற்போது மேலும் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தலைமை செயலாளர் வெ.இறையன்பு இடம் மாற்றம் செய்துள்ளார். மருத்துவத் துறை முதன்மைச் செயலாளராக பி.செந்தில்குமார், பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையராக இருந்த ஜெகன்னாதன், பொதுத் துறை செயலாளர், தேசிய சுகாதார திட்டக் குழு இயக்குனராக தரேஸ் அகமது மற்றும் சுகாதார திட்ட இயக்குனராக உமா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞ்ராக மூத்த வழக்கறிஞரும் முன்னாள் எம்.பியுமான சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று வெளியிட்டார். 2002-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி.யாக பணியாற்றியவர் சண்முகசுந்தரம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 1996 முதல் 2001 வரை தமிழக அரசு வழக்கறிஞராகவும் சண்முகசுந்தரம் பணியாற்றினார். 1995-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த மறைந்த ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி நிலம் அபகரிப்பு வழக்கு தொடர்ந்தார் என்பதற்காக வெல்டிங் குமார் உள்ளிட்ட ரவுடிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிர் பிழைத்தவர் சண்முகசுந்தரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications