சென்னையில் எங்கே அமைகிறது இரண்டாவது விமான நிலையம்? 17ஆம் தேதி முக்கிய மீட்டிங்!
சென்னை: சென்னையில் அமைய உள்ள இரண்டாவது சர்வதேச விமானம் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கிய சர்வதேச விமானங்களில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையமும் ஒன்றாகும். பல முக்கிய நகரங்களுக்கு மீனம்பாக்கம் ஏர்போர்டில் இருந்து நேரடியாக விமானங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் விமானத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதை மீனம்பாக்கம் ஏர்போர்டால் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது

முக்கிய ஆலோசனை
இதன் காரணமாகச் சென்னையில் இரண்டாவது சர்வதேச விமானநிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. விமான நிலையம் கட்ட ஏதுவான இடத்தை தேடி, அதைக் கண்டறியும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக ஜூன் 17ஆம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை கொண்ட உயர்மட்டக் குழு டெல்லி செல்கிறது.

இரு இடங்கள்
அவர்கள் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உடன் ஆலோசனை நடத்த உள்ளனர். தலைநகர் சென்னையில் மொத்தம் நான்கு இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு, இந்திய விமான நிலைய ஆணையம் சமீபத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்திடம் (டிட்கோ) தனது பரிந்துரையை சமர்ப்பித்து இருந்தது. அதில் பன்னூர் மற்றும் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையத்தை அமைக்கலாம் எனக் கூறி இருந்தது.

அமைச்சர் தகவல்
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், "விமான நிலையங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சரை ஜூன் 17ஆம் தேதி சந்திக்க உள்ளோம். மாநிலம் முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும். அதேபோல திட்டமிடப்பட்டுள்ள புதிய விமான நிலையம் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும்" என்றார்.

விரைவில் இறுதி முடிவு
மேலும், விமான நிலையம் அமையும் இடம் இறுதி செய்யப்பட்ட உடன், முதல்வர் ஸ்டாலின் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னூர் மற்றும் பரந்தூரில் என இரு இடங்களும் ஆப்ஷனில் உள்ளதாகவும் இரு இடங்களின் சாதக பாதகங்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் விரைவில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

சோதனை
பரிந்துரை செய்யப்பட்டுள்ள இரு இடங்களிலும் OLS எனப்படும் Obstacle Limitation Surface Survey செய்யப்பட வேண்டும். இரு இடங்களிலும் சில சிக்கல் இருப்பதால் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, OLSஐ நடத்துவது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார். கட்டுமான பணிகளில் எந்தவொரு தாமதமும் ஏற்படவில்லை என்றால், இரண்டாவது சர்வதேச விமான நிலையம் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை
இடத்தை இறுதி செய்வது, விரிவான திட்ட அறிக்கையை உருவாக்குவது, பல துறை அதிகாரிகளிடம் இருந்து ஒப்புதல், கட்டுமான நிறுவனத்தைத் தேர்வு செய்வது என பல்வேறு நிலைகள் இதில் இன்னும் உள்ளது. அதிகரித்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்கும் வகையில் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உடன் புதிய ஏர்போர்ட் ஏற்படுத்தப்படும். சில ஆண்டுகள் முன்பு வரை நாட்டின் மூன்றாவது முக்கிய ஏர்போர்ட்டாக சென்னை இருந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அந்த இடத்தை சென்னை இழந்தது. இந்த புதிய விமான நிலையம் மீண்டும் அந்த பெயரைப் பெற்றுத் தரும் என்றே நம்பப்படுகிறது!
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications