மாஸ்டர்மைண்ட் "ரோலக்ஸ்" யார்? சென்னைக்கு வந்த பல கிலோ கொகைன்.. அடேங்கப்பா மதிப்பு இத்தனை கோடியா?
சென்னை: எத்தியோப்பியாவிலிருந்து நூதன முறையில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட கொகைன் போதை பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதை கடத்தி வந்த நபரையும் கைது செய்துள்ளனர். இந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.100 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெனிசுலாவிலிருந்து வந்த பெண் ஒருவர் இதேபோல போதை பொருட்களை கடத்தி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். தற்போது இதனைத் தொடர்ந்து மற்றொரு கடத்தல் முயற்சி அரங்கேறியுள்ளது.
உலக அளவில் மிகவும் ஆபத்து நிறைந்த போதைப்பொருளாக கொகைன் கருதப்படுகிறது. பொதுவாக இது தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, பிரேசில், வெனிசுலா ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு போதை பவுடராக தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவின் உலக போதைப்பொருள் ஆய்வறிக்கையின்படி, கடந்த 2021ம் ஆண்டு மட்டும் சுமார் 21 மில்லியன் மக்கள் கொகைனை பயன்படுத்துகின்றனர். அதேபோல, இது வட அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டாலும் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படுகிறது.
இந்நிலையில், தற்போது எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான கொகைன் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை கடத்த வந்த நபரையும் சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். எத்தியோப்பியாவிலிருந்து பெருமளவு போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, எத்தியோப்பியாவிலிருந்து சென்னை வந்த இக்பால் பாஷா என்பரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அவரது உடைமைகளை பரிசோதித்து பார்த்ததில், சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 9.590கி.கி கொகைன் போதைபொருட்கள் மறைத்து வைத்து கடத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம், யாருக்காக கொகைன் கடத்தப்பட்டது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் இந்த கடத்தலுக்கும் தொடர்பு இருக்கிறதா? என விசாரித்து வருகின்றனர்.
மைக்ரோசாப்ட், மெக் டொனால்ட், கெல்லாக்ஸ் போன்றவற்றின் வருட வருமானத்தை காட்டிலும், அதிக வருமானம் கொகைன் பயன்பாட்டின் மூலம் வருகிறது. இது உலகளவில் விற்கப்படும் கொகைனை கொண்டு அறியப்படும் தகவலாகும். கொகைன் பயன்படுத்துவது, ஒரு மணிநேரத்திற்குள் 2,400% மாரடைப்பு ஏற்பட காரணியாக அமைகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், ஆரம்பக் காலத்தில் கொகைனை மருந்தாக பயனடுத்தி வந்த முறையும் இருந்தது. பிறகு இதன் தாக்கத்தை அறிந்து தடை செய்தனர்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications