Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாநில கல்விக் கொள்கை வரைவு அறிக்கை எப்போது? அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 6 மாதங்களுக்குள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என குழு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில கல்விக் கொள்கையும் அமையும் என்று கூறப்பட்டது.

அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும் என்று குறிப்பிடப்பட்டது.

மாநில கல்விக் கொள்கை

மாநில கல்விக் கொள்கை

இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

13 பேர் கொண்ட குழு

13 பேர் கொண்ட குழு

இதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட மாநில கல்வி கொள்கை குழுவில் சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் ஆகியோர் உள்ளனர்.

 குழுவினர் யார்?

குழுவினர் யார்?

அதேபோல் பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 கருத்துக் கேட்பு கூட்டம்

கருத்துக் கேட்பு கூட்டம்

இந்த குழு, ஒரு வருடத்தில் கல்வி கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநில கல்விக் கொள்கை தொடர்பான மாவட்ட அளவிலான கருத்து கேட்பு கூட்டம் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மாநில கல்வி கொள்கை அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

 6 மாதங்கள்

6 மாதங்கள்

இந்தநிலையில் மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை 6 மாதங்களுக்குள் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என குழு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாநில கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை டிசம்பர் மாதத்தில் சமர்பிக்கப்படும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+