மழைக்கால நோய்களில் இருந்து மக்களை காக்க சிறப்பு மருத்துவ முகாம் - மருந்து, மாத்திரை இலவசம்
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை ஒட்டி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். இந்த மருத்துவ முகாம்களில் காய்ச்சல், தலைவலி, சளி உள்ளிட்ட பரிசோதனைகளுடன் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார். தேனாம்பேட்டையில் நடைபெற்று வரக்கூடிய மருத்துவ முகாமில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

மருத்துவ முகாம் தொடக்கம்
200 வார்டுகளில் தனியார் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகள் சார்பாக 200 முகாம்களும் சென்னை மாநகராட்சி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் 200 முகாம்கள் என மொத்தம் 400 மருத்துவ முகாம்கள் சென்னை முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவருக்கும் வரும்முன் காப்போம் திட்டத்தின் மூலமாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

சென்னையில் உயர் சிகிக்சை
மேலும் உயர் சிகிச்சைக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்ற நபர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சென்னையில் உள்ள சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த மருத்துவ முகாம் மழைக்காலம் முடியும் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண பொருட்கள்
இந்த மருத்துவ முகாம்களில் காய்ச்சல், தலைவலி, சளி உள்ளிட்ட பரிசோதனைகளுடன் கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. சித்த மருத்துவத்துறையின் சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. சிறப்பு மருத்துவ முகாமை திறந்து வைத்த முதல்வர் பிறகு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
Recommended Video

சென்னையில் 500 முகாம்கள்
சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு சாலையில் உள்ள சட்டமன்ற தொகுதிக்கான அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடமாடும் மருத்துவ முகாம்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சுகாதாரத் துறை சார்பில் ஆங்காங்கே உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் 4 ஆயிரத்து 55 இடங்களில் மருத்துவ பருவ மழைக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 398 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்று சென்னையில் 500 மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

மழைக்கால நோய்கள்
மழைக் காலங்களில் ஏற்படும் நோய் தொடர்பான காய்ச்சல், இருமல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவே இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னையில் ஸ்டான்லி, கேஎம்சி போன்ற மருத்துவமனைகளில் உள்ள 100 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மூலம் சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மருத்துவ சேவை வழங்கி வருகின்றனர். மருத்துவர்கள் ,செவிலியர்கள் ,மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் என ஒன்றரை லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். 2000ற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ களப்பணியாளர்கள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சுகாதாரத் துறை சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நடமாடும் முகாம்
தமிழ்நாடு முழுவதும் 1,500 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இயங்கி வருகிறது. சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது" என்றார். தொடர்ந்து பேசிய அவர் , மருத்துவமனைகள், பள்ளிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை 24மணி நேரமும் வெளியேற்ற மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications