ரிசார்ட்களில் விறுவிறு புக்கிங்! கவுன்சிலர்களை கவனிக்க தனிடீம்! பதவிகளை குறிவைக்கும் பிரமுகர்கள்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், வெற்றிபெறுபவர்களை கவனிக்க இப்போதே ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றனர் மேயர் மற்றும் நகராட்சி சேர்மன் பதவியை எதிர்பார்ப்பவர்கள்.
கூவத்தூர் ரிசார்டில் எம்.எல்.ஏ.க்களை தங்கவைத்து அதிமுக ஆட்சியை சசிகலா தொடர வைத்தது போல், நாளைய தினம் கவுன்சிலர்களாக வெற்றிபெறுபவர்களை ரிசார்ட்களில் தங்கவைத்து பாதுகாத்து மேயர் மற்றும் நகராட்சி சேர்மன் ஆகிவிடலாம் எனக் கணக்குப் போட்டுள்ளனர் முக்கியப் பிரமுகர்கள் பலர்.
இதனால் நேரடி தேர்தலுக்கு இணையாக மறைமுகத் தேர்தலும் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழகம் முழுவதும் கடந்த 19-ம் தேதி சனிக்கிழமை ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் அன்றைய தினமே அனைத்து முடிவுகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் போட்டியிட விரும்பும் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கவுன்சிலர்களை பலமாக கவனிக்க ஆயத்தமாகிவிட்டனர்.

மறைமுகத் தேர்தல்
ஏனெனில் மறைமுகத் தேர்தலில் ஒவ்வொரு கவுன்சிலர் அளிக்கக் கூடிய வாக்கும் மிக முக்கியமானது என்பதால் அவர்களை தங்கள்வசப்படுத்தும் முயற்சியில் பதவிகளை எதிர்பார்ப்பவர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கோவை, என பல இடங்களில் ரிசார்ட்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் கவுன்சிலராக வெற்றிபெறுபவர்களை தங்க வைக்க ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கியப்புள்ளிகள் புக்கிங் செய்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விறுவிறுப்பு
தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளைய தினத்தில் இருந்து மறைமுகத் தேர்தல் நடைபெறும் நாளான மார்ச் 4-ம் தேதி வரை கவுன்சிலர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மேயர் மற்றும் நகர்மன்றத் தலைவர் பதவிகளை குறிவைத்து காய்நகர்த்துபவர்களுக்கு இருக்கிறது. இதனால் நேரடி தேர்தலுக்கு இணையாக மறைமுகத் தேர்தலில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது எனத் தெரிகிறது.

கூவத்தூர் பாணி
கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பி.எஸ்.தர்மயுத்தம் நடத்திய போது அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பை கூவத்தூர் ரிசார்ட்டில் வைத்து சுமூகமாக முடித்து வைத்து ஆட்சியை தொடர வைத்தார் சசிகலா. இன்று உள்ளாட்சி அமைப்புகளில் பதவி நாற்காலியில் அமர துடிப்பவர்கள் பலரும் அந்த கூவத்தூர் நிகழ்வையே முன்மாதிரியாக கொண்டு செயல்பட முன்வந்திருப்பது கவனிக்கத்தக்கது.
-
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிகமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு!












Click it and Unblock the Notifications