சென்னை வெள்ளம் டூ கஜா வரை.. மாறாத ஸ்டிக்கர் கலாசாரம்.. அதையும் நிவாரணத்துக்கு செலவிடுவது எப்போது?
சென்னை: சென்னை வெள்ளம் ஏற்பட்டபோது தொடங்கிய ஸ்டிக்கர் ஓட்டும் கலாசாரம் தற்போது கஜா புயலில் நடந்து வருவது வேதனையை அளிக்கிறது. ஸ்டிக்கருக்கு செலவு செய்யும் காசை நிவாரணத்துக்கு பயன்படுத்தும் பக்குவம் வருவது எப்போது?
தற்போது பிறந்த நாள் தொடங்கி இறந்தநாள் வரை டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்படுகிறது. இதுவும் ஒரு விளம்பரம் போல் உள்ளது. அதிலும் சிறிய பொருள்களை நிவாரணமாக கொடுத்தாலும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ளும் வழக்கம் அனைவருக்கும் குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு உள்ளது.
சென்னை வெள்ளம் ஏற்பட்ட போது மக்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரண பொருட்களில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது, சில இடங்களில் ஸ்டிக்கர் அடிக்க தாமதமானதால் அப்பகுதிகளுக்கு நிவாரண உதவிகளையும் தாமதப்படுத்திய சம்பவங்களை நம்மால் மறக்க முடியாது.

சமூகவலைதளங்கள்
அதிலும் மற்ற மாணவர்கள் வழங்கிய நிவாரணங்களில் கூட தமிழக அரசின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு சர்ச்சை எழுந்தது. இதை சமூக வலைதளங்களில் நார் நாராக கிழித்ததும் தெரிந்த கதைதான். இந்த ஸ்டிக்கர் ஒட்டும் கலாசாரம் தற்போது கஜா புயலிலும் தொடர்கிறது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண வழங்க அரசியல் தலைவர்கள் பணியை தொடங்கினர்.

நோக்கத்தில்...
தமிழக அரசு வழங்கிய நிவாரண பொருட்களில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் படங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அது போல் அதை வழங்கும் வையும் இரட்டை இலையின் நிறமான பச்சை நிறத்தில் வழங்கப்பட்டிருந்தது. அரசாவது தாங்கள் மீண்டும் மக்களை சந்திக்க வேண்டுமே என்ற நோக்கத்தில் ஸ்டிக்கர் வெளியிடுவது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம்.

தண்ணீர் பாட்டில்கள்
ஆனால் திரை மறைவில் ரஜினிகாந்த் எத்தனையோ உதவிகளை செய்து வருவதாக நாம் கேள்விப்பட்டது உண்டு. அப்படியிருக்கையில் அவரது ரஜினி மக்கள் மன்றத்தினரும் உணவு பொருட்கள் முதல் குடிக்கும் தண்ணீர் பாட்டில்கள் வரை ரஜினியின் படங்களை ஒட்டியுள்ளனர்.

வரிசையில்
அதிலும் தண்ணீர் லாரிக்கு பின்புறத்தில் ரஜினியின் தலைப்படத்தை வரைந்துள்ளனர். இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் இன்னும் கட்டுக்கடங்காமல் ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் மும்முரமாக உள்ளன. சரி இவரும் வருங்கால அரசியல்வாதிதானே என கடந்து செல்ல நினைத்தால் தேசிய கட்சியான பாஜகவும் அந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது.

தமிழிசை ஸ்டிககர்
கஜா புயலுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களில் பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழிசை ஆகியோரின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. கலர் கலரான குடங்களிலும் தமிழிசையின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது சிரிப்பை வரவழைக்கிறது.

எதுக்கு இந்த விளம்பரம்
நாம் சோற்றில் கை வைப்பதற்காக சேற்றில் கை வைத்த டெல்டா விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் நிவாரணப் பொருட்களில் எதற்கு இந்த விளம்பரம். இதுபோல் விளம்பர ஸ்டிக்கர்கள் அடிப்பதற்கே பல கோடி செலவாகியிருக்கும். அதை நிவாரணத்துக்கு செலவிட்டிருந்தால் கூட புண்ணியமாக போயிருக்கும். அதை விடுத்து யாருக்கும் வேண்டும் இந்த விளம்பரம்?
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications