சு.வெங்கடேசன் Vs பாலபாரதி - சிபிஎம் மாநில செயலாளர் பதவி யாருக்கு? களைகட்டும் சமூக வலைதள விவாதங்கள்!
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.எம், சிபிஎம்) மாநில செயலாளர் பதவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி. பொருத்தமானவர் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதிதான் சரியான தேர்வாக இருப்பார் என்றும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
சி.பி.எம். கட்சியின் தமிழ் மாநில குழு செயலாளராக கே.பாலகிருஷ்ணன் இருந்து வருகிறார். சி.பி.எம். கட்சியின் 23-வது மாநில மாநாடு வரும் மார்ச் 30 முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மூன்று நாள் மாநாட்டில், சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

சிபிஎம் அடுத்த செயலாளர்?
இதற்கு முன்னதாக 23-வது மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சி.பி.எம். கட்சியின் புதிய மாநில செயலாளர் யார் என்பது தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன.

விவாதம் தொடங்கியது
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தோழர்கள் என்ற ஃபேஸ்புக் குழுமத்தில் கம்யூனிச பற்றுள்ள யாரோ ஒருவன் என்ற அடைமொழியுடன் ஒரு செய்தி பகிரப்பட்டது. அதில், இதுவரை மார்க்சிஸ்டு கட்சியில் இருந்த தலைவர்களை அந்த கட்சி உறுப்பினர்களுக்கே தெரியாது. அந்த அளவுக்கு மக்களை கவர்ந்த தலைவர்களாக இருந்தனர். அதாவது சங்கரையா, பாலகிருஷ்ணன் வரதராசன் போன்ற மாநில தலைவர்கள் படத்தை பார்த்தால் தமிழக மக்களுக்கு அடையாளம் தெரியாது. முதலில் மக்கள் மத்தியில் அறிமுகமான பிரபலமான ஒரு முகம் உங்கள் கட்சிக்கு தேவை.

வெங்கடேசன் எம்.பி.
அப்படி ஒரு பிரபலமான தலைவர் இருந்தால்தான் உங்கள் கட்சி கொள்கை மற்றும் உங்கள் நேர்மையான செயல்பாடுகள் மக்களுக்கு தெரியும். இப்பொழுது ஊடகங்களில் பரவலாக அறியப்படும் ஒரு தலைவராக மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இருக்கிறார். இவரை மாநில செயலாளர் ஆக்கினால் உங்கள் கட்சி வளருவதற்கு ஒரு வேளை வாய்ப்பு உள்ளது. முகமே தெரியாத தலைவர்களை செயலாளர் ஆக்கினால் உங்கள் கட்சி வளராது என பதிவிட்டிருந்தார். இதுதான் இப்போது விவாதத்தை கிளப்பி இருக்கிறது.

பாலபாரதிக்கு ஆதரவு
இதற்கு திண்டுக்கல்லை சேர்ந்த தமிழ் கணிணி வல்லுநர் முனைவர் துரைப்பாண்டி, நான் கீழ்வருமாறு பின்னூட்டம் இட்டேன். ஏன் தோழர் பாலபாரதிக்கு அப்பதவி தரக்கூடாது. பெண்ணுக்கான உரிமையும் சென்றடையும் அல்லவா? என கேள்வி எழுப்பி இருந்தார். முனைவர் துரைப்பாண்டியின் இந்த பதிவில் பாலபாரதி, எதாவது வம்பை இழுக்காமல் தூக்கம்வராதுபோல என்று மட்டும் பதிலளித்துள்ளார். மேலும் மூத்த பத்திரிகையாளரும் பிரண்ட்லைன் ஆசிரியருமான Vijayasankar Ramachandran "இதை நான் வழிமொழிகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். மதுரையில் நடைபெறும் சிபிஎம் மாநில மாநாட்டில் மாநில செயலாளர் பதவி மதுரைக்கா? திண்டுக்கல்லுக்கா? என்பது தெரிந்துவிடும்.
-
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications