சென்னையில் புறநகர் ரயில்கள் இயக்கம் - எந்தெந்த நேரத்தில் யார் யார் பயணம் செய்யலாம் தெரியுமா
கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் இன்று முதல் சென்னை புறநகர் ரயிலில் அனைவரும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதை இன்று காலை முதல் ரயில் சேவை தொடங்கியுள்ளது.
சென்னை: கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் சென்னையில் புறநகர் ரயில் சேவை இயக்கப்படுகிறது. பெண்களுடன் பயணிக்கும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போதும் பயணிக்கலாம் எனவும் ஆண்கள் பீக் ஹவர்ஸ் நேரங்கள் தவிர பிற நேரங்களில் மட்டுமே பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சென்னையில் புறநகர்களின் சேவை குறைக்கப்பட்டது. முன்களப்பணியாளர்கள், வேலைக்கு செல்பவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அரசு அனுமதித்துள்ள நிலையில் மெட்ரோ ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் இன்று முதல் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பெண்கள் எப்போது பயணிக்கலாம்
பெண்கள் , பெண்களுடன் பயணிக்கக்கூடிய 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்றும் , ஆண்கள் பீக்ஹவர்ஸ் என்று சொல்லப் படும் முக்கிய நேரத்தைத் தவிர்த்து பிற நேரங்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் பயணிக்க அனுமதி
காலை 7 மணி முதல் 9.30 மணி வரையிலும மாலை 4.30 மணி முதல் 7 மணி வரையிலும் ஆண்கள் பயணிக்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரையும் , இரவு 7 மணி முதல் கடைசி நேரம் வரையிலும் ஆண்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்
அதேபோல் ரயில்கள் இயக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ள தெற்கு ரயில்வே மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள்,அத்தியாவசிய பணியாளர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் ரயிலில் பயணிக்கலாம் என அனுமதி அளித்துள்ளது.

ரிட்டன் டிக்கெட்
தொலைதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களை பொருத்தவரை ஒரு வழிப்பயணம் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு ரிட்டன் டிக்கெட் அளிக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications