கமல்ஹாசனின் ‘கணீர்’ குரல்.. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் புல்லரிக்க வைத்த சம்பவம்.. பிரம்மிப்பு!
சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், சுதந்திர போரில் தமிழர்களின் பங்கை பறைசாற்றும் ஒலி - ஒளி நிகழ்ச்சி நடிகர் கமல்ஹாசன் குரலில் உருவாக்கப்பட்டு அரங்கேற்றப்பட்டது.
Recommended Video
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வில், கமல்ஹாசன் குரலில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்றும் அதன் தொடர்ச்சியாக 'தமிழ் மண்' கண்கவர் நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரமும், தீரமும் கமல்ஹாசனின் குரலில் கேட்க மயிர்க்கூச்செறியச் செய்தது. வெளிநாட்டவர்களும் இந்த நிகழ்ச்சியை வியந்து பார்த்தனர்.

வியக்க வைத்த நிகழ்ச்சி
கடந்த ஜூலை 28ஆம் தேதி நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் குரலில் தமிழர்களின் பல நூறு ஆண்டுகால வரலாற்றை பின்னணியாக கொண்ட ஒளி - ஒலி நிகழ்வு அனைவரையும் வியக்க வைத்தது. 1,200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில் தமிழர் கலை, கலாசாரம் செழித்து இருந்ததற்கான சான்று தொடங்கி பல்வேறு பெருமைகளும் முப்பரிமாண படத்துடன் விளக்கப்பட்டது.

தமிழர்களின் பெருமை
அகழ்வாய்வு தொடங்கி தமிழகர்களின் நாட்டுபுற நடனம், ஜல்லிக்கட்டு, கல்லணை, திருக்குறள், மாமல்லபுரம் உள்ளிட்ட தமிழகம் கலை, இலக்கியம், வரலாறு, நீர் பாசனம், வீர விளையாட்டு போன்றவற்றை கண் முன்னே கொண்டு வரும் வகையில் ஒளிபரப்பானது ஆவணப்படம். அதோடு இணைந்த நிகழ்த்து கலை நிகழ்ச்சி அனைவரையும் வியக்க வைத்தது.

இன்றும் அரங்கேற்றப்பட்டது
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கமல்ஹாசன் குரலில் ஒலித்து பலரது கவனத்தை ஈர்த்த 'தமிழ் மண்' நிகழ்த்து கலையின் தொடர்ச்சி இன்றைய நிறைவு விழாவில் இடம்பெற்றது. விடுதலைப் போராட்ட வரலாற்றையும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெருமையையும் பறைசாற்றும் இந்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரம்மிப்பு
கமல்ஹாசனின் கணீர் குரலில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழக்கையும், வரலாறும், அரங்கில் கூடியிருந்த ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் சிலிர்க்கவும், பிரம்மிக்கவும் வைத்தது. இந்த நிகழ்வை கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின், இறுதியில் தலைக்கு மேலே கையை உயர்த்தி கைதட்டினார்.












Click it and Unblock the Notifications