தமிழகத்தில் ஒரேநாளில் 2,316 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பல மாதத்துக்கு பின் ஒருவர் பலி.. அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனாவால் ஒருவர் பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 2000யை கடந்துள்ளது.
இதனால் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விபரங்களை தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்றும் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் கெரோனாவால் 2,316 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பாதிப்பு எவ்வளவு?
இதில் சென்னையில் மட்டும் 596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக செங்கல்பட்டில் 354 பேர், கோவையில் 164 பேர், திருவள்ளூரில் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 100க்கு கீழ் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இன்றைய பாதிப்போடு சேர்த்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு என்பது 35 லட்சத்து 17 ஆயிரத்து 777 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெறுவோர் எவ்வளவு?
அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று குணமாகி 2,458 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை மொத்தம் 34 லட்சத்து 62 ஆயிரத்து 662 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் தற்போது வரை 17,085 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கையும் அடங்கும்.

ஒருவர் பலி
இருப்பினும் இன்று கொரோனாவால் ஒருவர் பலியாகி உள்ளார். அதாவது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை என்பது 38 ஆயிரத்து 30 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பலி ஏற்படாத நிலையில் தான் இன்று ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியாகும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications