விடாமல் துரத்தும் கனமழை! தமிழ்நாட்டில் எந்ததெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
சென்னை: கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது. சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் சற்று முன் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பருவமழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த சனிக்கிழமை பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த 3 நாட்களாக லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முதல்நாள் இரவு மழை தீவிரம் அடைந்தது. முக்கியமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்தது. பல இடங்களில் 7 செமீ அளவிற்கும் அதிகமாக மழை ஒரே நாளில் பெய்தது.

இன்றும் மழை
இந்த நிலையில் நேற்று இரவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தீவிரமாக பெய்து வந்தது. நேற்று அதிகாலையில் இருந்து பிற்பகல் வரை மழை விட்டு இருந்தது. அதன்பின் மீண்டும் மாலைக்கு பின் மழை பெய்ய தொடங்கியது. தற்போது கடந்த 6 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. 6 மணி நேரமாக விடாமல் மழை பெய்து கொண்டு இருக்கிறது.

சென்னை
சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதேபோல் கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,, ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நேற்று விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

விடுமுறை
இதை தொடர்ந்தே தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 15 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் மழை பெய்யும். கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,, ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மறுநாள் மயிலாடுதுறை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications