"வட்ட கிணறு.. வத்தாத கிணறு சார்.." வாக்குசாவடியை காணவில்லை என புகாரளித்த மக்கள்.. சென்னையில் ஷாக்!
சென்னை: சென்னையில் வாக்குசாவடியை காணவில்லை என்று வாக்காளர்கள் புகார் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. காலை 7 மணியில் இருந்து மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். கடந்த தேர்தலை விட இந்த முறை மக்கள் அதிகாலையிலே கூட்டமாக வந்து வாக்களிக்க லைனில் நின்றனர்.
போக போக வெயில் வரும் என்பதால் அதிகாலையிலேயே வாக்களிக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதே சமயம் பல்வேறு வாக்கு சாவடிகளில் மக்கள் பல்வேறு காரணங்களால் வாக்களிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

அறிகுறி
இன்று காலையில் இருந்து கொரோனா அறிகுறி இருந்த பலர் வாக்களிக்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். உடல் வெப்பநிலை சோதனை செய்யப்பட்ட பின்பே மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் மக்கள் பலர் காலையில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

பூத் சிலிப்
அதேபோல் சில தொகுதிகளில் பூத் சிலிப் இல்லாத நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறி இருந்தது. ஆனாலும் சில தொகுதிகளில் பூத் ஸ்லிப் இல்லாதவர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படாதால் சர்ச்சை எழுந்தது.

காணவில்லை
இப்படி பல பிரச்சனைகள் நிலவி வரும் நிலையில் சென்னையில் ஒரு வாக்குசாவடியையே காணவில்லை என்று மக்கள் புகார் வைத்துள்ளனர். சோழிங்கநல்லூர் தொகுதியில் வாக்குச்சாவடி 266ஐ காணவில்லை. சோழிங்கநல்லூர் ஜார்ஜ் பள்ளியில் அமைய வேண்டிய வாக்குச்சாவடி 266ஐ காணவில்லை என்று வாக்காளர்கள் புகார் வைத்துள்ளனர்.

புகார்
இங்கு அமைய வேண்டிய வாக்குச்சாவடி எதோ சில காரணங்களாக அமைக்கப்படவில்லை. இதனால் இங்கு வாக்களிக்க வந்த மக்கள் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர். மாறாக வாக்குச்சாவடி எண் 266 இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு பள்ளியில் இந்த வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications