உஷார் நிலையில் மின் வாரியம்... ஊழியர்களை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருச்சி கோட்டங்களில் மின் விநியோகத்தை 24 மணி நேரமும் கண்காணிக்குமாறு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் மின்வாரிய ஊழியர்கள் முன்பைக்காட்டிலும் இப்போது கூடுதல் கவனத்துடன் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இயல்பு வாழ்க்கை
கடந்த 25-ம் தேதி பரவலாக தொடங்கிய மழை கடந்த 2 நாட்களாக சென்னை, நாகை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குவதால் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கத் தொடங்கியுள்ளது.

தொடர் கண்காணிப்பு
இந்நிலையில், மழை மேலும் வலுவடையும் என்பதால் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய மூன்று துறைகளும் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. அதிகாரிகளும், ஊழியர்களும் மழைவெள்ள பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
மின் விநியோகத்தையும், துணை மின் நிலையங்களையும் பொறியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் என்றும், அவசர காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு
இந்த நடைமுறை மறு அறிவிப்பு வரும் வரை செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மின் வாரியம் உத்தரவால் பொறியாளர்களும், மின்வாரிய ஊழியர்களும் மின் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தத்தொடங்கியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications