உஷார் நிலையில் மின் வாரியம்... ஊழியர்களை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருச்சி கோட்டங்களில் மின் விநியோகத்தை 24 மணி நேரமும் கண்காணிக்குமாறு பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் மின்வாரிய ஊழியர்கள் முன்பைக்காட்டிலும் இப்போது கூடுதல் கவனத்துடன் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இயல்பு வாழ்க்கை
கடந்த 25-ம் தேதி பரவலாக தொடங்கிய மழை கடந்த 2 நாட்களாக சென்னை, நாகை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குவதால் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கத் தொடங்கியுள்ளது.

தொடர் கண்காணிப்பு
இந்நிலையில், மழை மேலும் வலுவடையும் என்பதால் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய மூன்று துறைகளும் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. அதிகாரிகளும், ஊழியர்களும் மழைவெள்ள பாதிப்புகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
மின் விநியோகத்தையும், துணை மின் நிலையங்களையும் பொறியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க வேண்டும் என்றும், அவசர காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு
இந்த நடைமுறை மறு அறிவிப்பு வரும் வரை செயல்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மின் வாரியம் உத்தரவால் பொறியாளர்களும், மின்வாரிய ஊழியர்களும் மின் விநியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்தத்தொடங்கியுள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications