வெளிநாட்டுகளில் சிக்கும் தமிழர்கள்.. தடுக்க தமிழக அரசு எடுக்கும் முடிவு - விரைவில் கட்டாயமாகும் விதி
சென்னை: வெளிநாடுகளில் தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள், பல்வேறு காரணங்களுக்கு அங்கு சிக்கித் தவிப்பதும் பின்னர் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மீட்கப்படுவது தொடர் கதையாகி இருக்கும் நிலையில் இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு புதிய விதியை அமல்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.
வெளிநாடுகளில் தொழில் நிமித்தமாக பல லட்சக்கணக்கான தமிழர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சில போலி ஏஜெண்டுகள், மோசடியான டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலம் ஏமாற்றப்பட்டு வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றன.
நல்ல வேலை என்று அழைத்துச் செல்லப்பட்டு அடிமையாக வேலை செய்ய வைப்பது, பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்துவது போன்றவை தொடர் கதையாகி வருகின்றன.

சிக்கும் தமிழர்கள்
இவ்வாறு சிக்கிக்கொள்ளும் தமிழர்கள் தங்களை மீட்கக்கோரி வீடியோக்கள் வெளியிடுவதும் அதன் பின்னர் தமிழ்நாடு அரசு தலையிட்டு அவர்களை தூதரக உதவியுடன் மீட்டு அழைத்து வருவதும் வாடிக்கையாகிவிட்டது. இதனை கட்டுப்படுத்த வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழர்கள் அரசிடம் நிச்சயம் பதிவு செய்ய வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்பட்டாலும் பலர் அதை பின்பற்றுவது கிடையாது.

நல வாரியம்
எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும், பிரச்சனைகளில் சிக்கினால் மீட்கவும் புலம்பெயர் தமிழர் நல வாரியத்தில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் தகவல்கள் முழுமையாக அரசிடம் இருக்கும் என்றும், விரைவில் நடைமுறைக்கு வர இருக்கும் இந்த புலம் பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

பதிவு செய்வது எப்படி?
சென்னையில் இயங்கி வரும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் Protector of Emigrants அலுவலகத்தில் ஆவணங்களை சமர்பித்து பதிவு செய்ய வேண்டும். இந்த அலுவலகம் மூலம் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் நிறுவனங்களின் பட்டியலை அறியலாம். மத்திய அரசு அங்கீகரித்த நிறுவனத்தில் சென்றால் மட்டுமே அவர்களை மீட்க அரசு முழு பொறுப்பேற்கும்.

பதிவு செய்த நிறுவனம்
பதிவு செய்த நிறுவனங்கள் மத்திய அரசிடம் ரூ.50 லட்சம் வரை டெபாசிட் செய்துள்ளது. இவர்கள் மூலம் வெளிநாடு செல்லும் பயணிகள் பிரச்சனையில் சிக்கினால் இந்த தொகையின் மூலமாக அவர்களை மீட்க அரசு முயற்சிக்கும். சுற்றுலா விசா மூலம் வெளிநாடு சென்று பணிபுரியக்கூடாது என்றும், சமூக வலைதளங்கள், செய்தித்தாள் விளம்பரங்களை முழுமையாக நம்பி வெளிநாடு செல்வதை தவிர்க்கவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications