தொடர்ந்து சரியும் கொரோனா கேஸ்.. தமிழகத்தில் இன்று 20421 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 434 பேர் பலி!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 20421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. லாக்டவுன் காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தினசரி கேஸ்கள் குறைய தொடங்கி உள்ளன.
தமிழகம் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தை கடந்து விட்டது உறுதியாகி உள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் கோவையில் கேஸ்கள் குறைவாக பதிவாகி வருகிறது.

எப்படி
தமிழ்நாட்டில் இன்று 20421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 434 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 27005 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 2237233 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

குணமாகி உள்ளனர்
தமிழ்நாட்டில் இன்று 33161 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 1965939 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 244289 ஆக உயர்ந்துள்ளது.

டெஸ்ட்
தமிழ்நாட்டில் இன்று 174982 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 163928 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 28028680 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னை
சென்னையில் இன்று 1644 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 21404 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். தமிழகத்தில் கோவையில் நிலைமை சரியாகி வருகிறது. கோவையில் 2645 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 31539 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 1694 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 15492 பேர் செங்கல்பட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.












Click it and Unblock the Notifications