வைகோவை முதல்ல அறிவாலயத்துக்குள்ளே விடுவாங்களா... தமிழிசை கேள்வி
வைகோ அறிவாலயத்துக்குள் நுழைய முடியுமா என தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை: "வைகோவால என்ன செய்ய முடியும்? முதல்ல அவரை அறிவாலயத்துக்கு உள்ளே விடுவாங்களா, மாட்டாங்களான்னே தெரியல" என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்காக அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கி உள்ளனர்.
இந்த தேர்தலில் போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் தமிழிசை சவுந்தராஜனிடம் கேட்டார்கள். அப்போது அவர் அளித்த பதில்கள்தான் இவை:

தமிழகம் வருகை
திருவாரூர் இடைத்தேர்தலை எப்படி எதிர்கொள்வோம் என்று நாங்கள் இன்னும் அறிவிக்கவில்லை. இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா? அப்படி போட்டியிட்டால், அதனை எப்படி எதிர்கொள்வது என இனிதான் முடிவு செய்வோம். இப்போதைக்கு எங்கள் முழு கவனம் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரப்போகிறார்.

எய்ம்ஸ் மருத்துவமனை
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது. அந்த தேர்தலில் எப்படியும் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன்தான் நாங்கள் கூட்டணி அமைக்க வாய்ப்பு நிறையவே உள்ளது. தமிழகம் வரும் பிரதமர் கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, பல தனி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள போகிறார். அதோடு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது" என்றார்.

என்ன செய்ய முடியும்?
உடனே செய்தியாளர்கள், தமிழகம் வரும் பிரதமருக்குதான் கருப்புகொடி காட்டப்போவதாக வைகோ சொல்லி இருக்கிறாரே என்று கேட்டனர். அதற்கு தமிழிசை, "வைகோவால் என்ன செய்ய முடியும்? ஒன்றுமே செய்ய முடியாது. அவரை முதலில் அறிவாலயத்துக்குள் விடுவார்களா? மாட்டார்களா? என்றே சந்தேகமாக உள்ளது. முதலில் அதனை போக்க எதையாவது செய்ய வேண்டும்.

தப்பு கணக்கு
பிரதமருக்கு கருப்புகொடி காட்டிவிட்டால், ராகுல்காந்தி சந்தோஷப்படுவார், அதனால் நம்மை கூட்டணியில் சேர்த்துக்கொள்வார்கள் என்று வைகோ கணக்கு போடுகிறார். ஆனால் எப்பவுமே அவர் போடும் கணக்கு எல்லாமே தப்புதான்" என்று பதிலளித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications