Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆட்டம் -பாட்டம் -கொண்டாட்டம்! ஊரெங்கும் 'நம்ம ஊரு திருவிழா'! களைகட்டப் போகும் தமிழ்நாடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையின் போது சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களிலும் நம்ம ஊரு திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

கடந்த 2006 -2011 திமுக ஆட்சில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது சென்னை சங்கமம் என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது தொடர்பான விவரம் வருமாறு;

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்

2022-2023 ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானியக் கோரிக்கையின் போது, கலை பண்பாட்டுத்துறை தொடர்பாக தமிழகத்தின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட கலைவிழாவினை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையினையொட்டி சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

நாட்டுப்புறக் கலை

நாட்டுப்புறக் கலை

நாட்டுப்புறக் கலை வடிவங்களை பொதுமக்களிடையேயும், உலகத் தமிழர்களிடையே கொண்டு செல்லும் நோக்கிலும், இன்றைய இளம் தலைமுறையினர் நாட்டுப்புறக் கலை வடிவங்களின் சிறப்பினை அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப்புறக் கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் சென்னையில் 'நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில் பல்வேறு நாட்டுப்புறக் கலைகள் இடம் பெறும் வகையில் பிரமாண்ட கலை விழாக்கள் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நடத்தப்படவுள்ளது.

கலைக் குழுக்கள்

கலைக் குழுக்கள்

இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் கலைக் குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவினை குறுந்தகடு (CD) அல்லது பென் டிரைவ் (Pen Drive)-ல் பதிவு செய்து, கலை பண்பாட்டுத்துறையின் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு தங்கள் குழுவின் முழு விவரங்களோடு (பெயர், முகவரி, தொலைபேசி எண் உட்பட) பதிவுத் தபாலில் (Registered Post) அனுப்பிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 இது தான் விதிமுறை

இது தான் விதிமுறை


கலை பண்பாட்டுத்துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தகுதியான கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நடைபெறவுள்ள 'நம்ம ஊரு திருவிழா'வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். கலைக்குழுக்கள் பின்வரும் விதிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும். தங்கள் குழுவின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் 5 நிமிட வீடியோவை பதிவு செய்து 13.12.2022-க்குள் கலை பண்பாட்டுத்துறையின் மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஒரு குழுவில் இடம் பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்கக்கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+