விவேக், கி.ரா, துளசி ஐயா வாண்டையார் உள்ளிட்ட 13 பேருக்கு தமிழக சட்டசபையில் இரங்கல்
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலசப்பாக்கம் பாண்டுரங்கன், ராணிப்பேட்டை முகமதுஜான், குளித்தலை பாப்பா சுந்தரம் உள்ளிட்ட 13 பேருக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
சென்னை: ஆளுநர் உரை மீதான விவாதம் சட்டசபையில் இன்று நடைபெறுகிறது. தமிழக சட்டசபை இன்று கூடியதும்
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலசப்பாக்கம் பாண்டுரங்கன், ராணிப்பேட்டை முகமதுஜான், குளித்தலை பாப்பா சுந்தரம் உள்ளிட்ட 13 பேருக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. உறுப்பினர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறி சட்டசபையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று அமைதி காத்தனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 16வது சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், புதிய சட்டசபையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.
இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டத் தொடரின், 2 வது நாளான இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியது . கூட்டம் தொடங்கியதும் மறைந்த நடிகர் விவேக்கிற்கு சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தன் நடிப்பாற்றலால் நகைச்சுவை மட்டுமல்லாது விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர், அவரின் இழப்பு திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் டி.எம். காளியண்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
இதே போல் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கலசப்பாக்கம் பாண்டுரங்கன், ராணிப்பேட்டை முகமதுஜான், குளித்தலை பாப்பா சுந்தரம், கோவை மேற்கு செ.அரங்கநாயகம், திருவொற்றியூர் விஜயன், செய்யூர் ராஜு, பர்கூர் ராஜேந்திரன், செஞ்சி சகாதேவன், மேட்டுப்பாளையம் சுலோச்சனா, பேரூர் கே.பி. ராஜு, மன்னார்குடி ராமச்சந்திரன், பழனி அன்பழகன், திருநாவலூர் ஜெ.பன்னீர்செல்வம் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது.
உறுப்பினர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறி சட்டசபையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் எழுந்து நின்று அமைதி காத்தனர்.
எம்.எல்.ஏக்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், உதயசூரியன், எஸ்.ஆர்.ராஜா, டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை சட்டப்பேரவையின் மாற்றுத்தலைவர்களாக சபாநாயர் அப்பாவு அறிவித்தார்.
ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. இறுதி நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் உரையாற்றுவார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications