Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்களுக்கு ஒரு நாள் தடை! கருணாநிதிக்கு இடம் தராதவர்கள் நீங்க.. அப்பாவு குட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை நிகழ்வில் இன்று பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அணி எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதித்துள்ளார் சபாநாயகர் அப்பாவு.

முதலில் 2 நாட்கள் சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்க சபாநாயகர் அப்பாவு தடை விதித்த நிலையில் அவை முன்னவரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் கோரிக்கையை ஏற்று தடையை ஒரு நாளாக குறைக்கப்பட்டது.

சட்டசபையில் இந்த இடத்தில் இன்னாரை அமரவைக்க வேண்டும், அமர வைக்ககூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என சபாநாயகர் அப்பாவு மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கூச்சல் குழப்பம்

கூச்சல் குழப்பம்

தமிழக சட்டசபை கூட்டத் தொடரின் 2வது நாள் கூட்டம் கூச்சல் குழப்பத்துடன் கடும் அமளி துமளிக்கு மத்தியில் தொடங்கியது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை எனக் கூறி அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் பெடும் பிரளயத்தையே உண்டு பண்ணிவிட்டனர். ஆனால் எதற்கும் அஞ்சாத சபாநாயகர் அப்பாவு, இருந்தால் இருங்கள் இல்லையென்றால் வெளியேறி விடுங்கள் என அதிமுக உறுப்பினர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

 அவையின் மையப்பகுதி

அவையின் மையப்பகுதி

ஒரு கட்டத்தில் அவையின் மையப்பகுதிக்கு அதிமுக உறுப்பினர்கள் வந்ததால் அவர்களை சபை காவலர்களை கொண்டு வெளியேற்ற உத்தரவிட்டார். இதனிடையே எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்த பிறகு சபாநாயகர் சில விளக்கங்களை கொடுத்தார். அதில் இந்த இடம் சவுகரியமாக உள்ளது அதை எனக்கு கொடுங்கள் என்று உறுப்பினர்கள் கேட்கலாமே தவிர இவரை இந்த இடத்தில் அமர வைக்கக் கூடாது என தன்னிடம் சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றார். முந்தைய காலத்தில் திமுகவின் சக்கரபாணி அவர்கள், தலைவர் கலைஞர் அவர்களுக்கு சக்கரநாற்காலியில் வந்து செல்ல இட வசதி செய்து தர அனுமதி கேட்டார். ஆனால் அவர் இருந்த இடமே போதும் என்று அப்போது ஆட்சியாளர்கள் கூறினர். எந்த அளவுக்கு அவர்கள் மனசாட்சி இல்லாமல் நடந்தார்கள் என்பது வரலாறு.

 ஒரு நாள் தடை

ஒரு நாள் தடை

சபையை முழு ஜனநாயகத்தோடு நடத்தி வருவதாக கூறிய சபாநாயகர் அப்பாவு, கடந்த காலங்களை போல் எடுத்தோம் கவிழ்த்தோம் என எந்த முடிவையும் தாம் எடுக்க மாட்டேன் எனவும் கூறினார். இதனிடையே சட்டசபையின் மாண்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை நிகழ்வில் 2 நாட்கள் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவை முன்னவரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் கோரிக்கையை ஏற்று 2 நாள் தடையை ஒரு நாளாக குறைத்தார்.

சபாநாயகர் விளக்கம்

சபாநாயகர் விளக்கம்

அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டது, பேரவைக்கு வர தடை விதித்திருப்பது ஏன் என்பது பற்றியெல்லாம் சட்ட நுணுக்கங்களின் அடிப்படையில் நீண்ட விளக்கத்தை கொடுத்தார் சபாநாயகர் அப்பாவு. இன்றே இப்படியென்றால் நாளை இன்னும் என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+