அன்னைக்கு அவ்ளோ சொன்னாரே அன்பில் மகேஷ்.. நாளை நடக்குமா? பயங்கர எதிர்பார்ப்பில் டெல்டா
டெல்டா விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
சென்னை: வாழை விவசாயத்தை காக்கும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தில் வாழைப் பழத்தை சேர்க்க வேண்டும் என்று டெல்டா வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்னனர்.
2021-22ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இன்றைய தினம் பட்ஜெட் தொடங்கி உள்ளது..
சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்புகள் கூடி உள்ளது..

திமுக
தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடிவு செய்துள்ளது... இந்த பட்ஜெட்டை நாளைய தினம் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.

வேளாண் துறை
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், டெல்டா விவசாயிகள் தனி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.. குறிப்பாக, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், மதிய உணவு திட்டத்தில் வாழைப் பழத்தை சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்னனர்... இத்துடன் மேலும் சில கோரிக்கைகளையும் விவசாயிகள் விடுத்துள்ளனர்.. அவைகள் இதுதான்:

நீர் ஆதாரங்கள்
நீர்நிலை பாதுகாப்புக்கு இந்த வரும் பட்ஜெட்டில் அதிக நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும்.. நீர் ஆதாரங்களை மீட்டெடுக்க வேண்டும்.. மத்திய, மாநில அரசுகள் வேளாண் பண்ணைகளில் விளைபொருட்களுக்கு ஆகும் உற்பத்தி செலவுகளை கணக்கிட்டு விவசாயிகளின் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்காக அமைக்கப்பட்ட வேளாண் குழுக்களின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். இதேபோல, 3 ஊராட்சிகளுக்கு ஒரு நெல்முதல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
Recommended Video

அமைச்சர்
கடந்த 2 மாதத்துக்கு முன்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், வாழ்வாதாரம் செழிக்கும் வகையில், வாழை விவசாயத்தை அழிவு பாதையில் இருந்து மீட்டெடுக்கவும், அவர்களின் வாழ்வாதாரம் உயரவும், மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து முதல்வரிடம் அறிக்கை சமர்பிப்பேன் என்று உறுதி தந்திருந்தார். அந்த வகையில், திருச்சி விவசாயிகளின் கோரிக்கை ஏற்கப்படும் என்றே தெரிகிறது.

எதிர்பார்ப்பு
மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் நலனுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது.. அவைகளில் பெரும்பாலும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாலும், இந்த ஆண்டு விவசாயத்திற்கு என்றே தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாலும் பெருமளவு விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றே நம்பப்படுகிறது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications