Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு.. தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மரணமடைந்த ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருநெல்வேலியை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

TN government should give Rs 10 lakhs compensation to Ramkumar family who arrested in Swathi murder case

ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவர் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் மரணமடைந்த ராம்குமார் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், ராம்குமார் மரணம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+