திருவொற்றியூர் கட்டிட விபத்து..நடந்தது என்ன?.. முன்கூட்டியே மக்களை வெளியேற்றாதது ஏன்?அமைச்சர் பேட்டி
சென்னை: திருவொற்றியூர் அரிவாங்குளத்தில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் இன்று காலை லேசாக விரிசல் விழுந்துள்ளது.
அதைப்பார்த்த மக்கள் உடனடியாக வெளியேறத் தொடங்கிய வேளையில் எதிர்பாராதவிதமாக கட்டிடம் மொத்தமாக நொறுங்கி விழுந்தது. இந்த கட்ட்டிடத்தில் வசித்து வந்த மக்கள் அனைவரும் வெளியேறியதால் நல்ல வேலையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

முதல்வர் அறிவிப்பு
ஆனால் மக்கள் பயன்படுத்திய அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன. மக்கள் யாரும் சிக்கியுள்ளார்களா என்பதை அறிய தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குடியிருப்பு கட்டிடத்தில் வீடிழந்த மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், வீடிழந்த 24 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் உடன்டியாக இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பகுதியில் குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ' மக்கள் வெளியேறி கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் காரணமாக கூட விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை முழுவதும் இதே நிலைதான்
இடிந்து போன குடியிருப்பு 1993ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சென்னை முழுவதும் 23000 வீடுகள் தகுதியற்ற நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிகவும் சேதம் அடைந்த கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற நாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம்.
Recommended Video

ஆய்வு செய்யப்படும்
தமிழகத்தில் பழமையான சேதம் அடைந்த கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தர கட்டுப்பாடு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தரமற்ற நிலையில் உள்ள வீடுகள் ஆய்வு செய்யப்படும் இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications