திருவொற்றியூர் கட்டிட விபத்து..நடந்தது என்ன?.. முன்கூட்டியே மக்களை வெளியேற்றாதது ஏன்?அமைச்சர் பேட்டி
சென்னை: திருவொற்றியூர் அரிவாங்குளத்தில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் இன்று காலை லேசாக விரிசல் விழுந்துள்ளது.
அதைப்பார்த்த மக்கள் உடனடியாக வெளியேறத் தொடங்கிய வேளையில் எதிர்பாராதவிதமாக கட்டிடம் மொத்தமாக நொறுங்கி விழுந்தது. இந்த கட்ட்டிடத்தில் வசித்து வந்த மக்கள் அனைவரும் வெளியேறியதால் நல்ல வேலையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

முதல்வர் அறிவிப்பு
ஆனால் மக்கள் பயன்படுத்திய அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன. மக்கள் யாரும் சிக்கியுள்ளார்களா என்பதை அறிய தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த குடியிருப்பு கட்டிடத்தில் வீடிழந்த மக்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், வீடிழந்த 24 குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் உடன்டியாக இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பகுதியில் குடிசை மாற்று வாரிய துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ' மக்கள் வெளியேறி கொண்டிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் காரணமாக கூட விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை முழுவதும் இதே நிலைதான்
இடிந்து போன குடியிருப்பு 1993ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். சென்னை முழுவதும் 23000 வீடுகள் தகுதியற்ற நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிகவும் சேதம் அடைந்த கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற நாங்கள் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம்.
Recommended Video

ஆய்வு செய்யப்படும்
தமிழகத்தில் பழமையான சேதம் அடைந்த கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக தர கட்டுப்பாடு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தரமற்ற நிலையில் உள்ள வீடுகள் ஆய்வு செய்யப்படும் இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications